The Evolution of Atheism: The Politics of Modern Movement tamil தமிழ் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நாத்திகவாதத்தின் பரிணாமம் (நூல் அறிமுகம்)

Loading

சமகாலத்தில் தீவிரமாக அலசப்படும் ஒரு தோற்றப்பாடாக நவநாத்திகம் (New-Atheism) மாறியிருக்கிறது. அந்த வகையில், நவநாத்திகவாதத்தை அதன் அறிவுத் தத்துவம், பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக-அரசியல் பரிமாணம் எனப் பல்வேறு கோணங்களில் ஆராயும் மிக முக்கியமான புத்தகமாக சமூகவியல் ஆய்வாளர் ஸ்டிபன் லெட்ரூவின் The Evolution of Atheism: The Politics of Modern Movement உள்ளது. யோர்க் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்திற்காகச் சமர்பிக்கப்பட்ட ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, சமூகவியல் பரப்பில் மத நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், சமூக-அரசியல் விவகாரங்களை அணுகுவதில் அவர்களது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதிலேயே ஆய்வாளர்கள் அதிகம் கரிசனம் கொள்கிறார்கள். ஆனால், மதத்தைத் துறந்தவர்கள் அல்லது நாத்திகர்களின் சமூக நடத்தை எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் சமூகவியல் துறையில் மிக அரிது. அந்த இடைவெளியை இப்புத்தகம் பூர்த்தி செய்ய முயல்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சலஃபிசமும் மரபுவாதமும் – நூல் அறிமுகம்

Loading

சமீபத்தில் வெளியான முனைவர் இமாத் ஹம்தாவின் Salafism and Traditionalism: Scholarly Authority in Modern Islam என்ற நூல் எமது உரையாடல்புலத்திற்குப் பயனளிக்கும் பல முக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. அதிலொன்று, நவீனகால சலஃபிசச் சிந்தனைப் பள்ளியானது இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வதற்கான மற்றொரு முறைமையாகவே (Hermeneutical Methodology) புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற அவரது கருத்து. ஏனெனில், கடந்த சில தசாப்தங்களாக சலஃபிசம் எனும் சொல் மிகவும் அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது. நாசகர அரசியல் குறிக்கோள்களை நோக்கி மக்களை வழிநடத்தும் கோட்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம் என்று கூறும் நூலாசிரியர், சலஃபிசத்தின் மையமான வாதங்களையும், மூலாதாரங்களை அவர்கள் அணுகும் விதத்தையும், அதிலுள்ள உள்முரண்பாடுகளையும் பகுப்பாய்வு செய்கிறார்.

அடுத்து, இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வது எப்படி என்பது குறித்த சலஃபிசச் சிந்தனைப் போக்கை, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த இஸ்லாமிய மரபுவாதத்தின் (Islamic Traditionalism) விவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் இமாத் ஹம்தா. இந்தப் பின்னணியில், இஸ்லாமிய மரபுவாதத்தின் பிரதான கருத்தாடல்கள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்

Loading

காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அரசுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதனுடைய பலத்தின் துணையுடனோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்

Loading

‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வதை முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள்

Loading

சீனாவின் கிழக்குப் பிராந்தியமான சிங்ஜியாங் மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்கள் திரைமறைவில் ஒரு கலாச்சாரக் கூட்டுப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு (Human Rights Watch) வெளியிட்ட நீண்ட அறிக்கை உலகை ஒருகனம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சமீபகாலமாக உய்குர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்

Loading

நபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.

மேலும் படிக்க