நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சலஃபிசமும் மரபுவாதமும் – நூல் அறிமுகம்

சமீபத்தில் வெளியான முனைவர் இமாத் ஹம்தாவின் Salafism and Traditionalism: Scholarly Authority in Modern Islam என்ற நூல் எமது உரையாடல்புலத்திற்குப் பயனளிக்கும் பல முக்கியமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. அதிலொன்று, நவீனகால சலஃபிசச் சிந்தனைப் பள்ளியானது இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வதற்கான மற்றொரு முறைமையாகவே (Hermeneutical Methodology) புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற அவரது கருத்து. ஏனெனில், கடந்த சில தசாப்தங்களாக சலஃபிசம் எனும் சொல் மிகவும் அரசியல்படுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டது. நாசகர அரசியல் குறிக்கோள்களை நோக்கி மக்களை வழிநடத்தும் கோட்பாடாகவே அது பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம் என்று கூறும் நூலாசிரியர், சலஃபிசத்தின் மையமான வாதங்களையும், மூலாதாரங்களை அவர்கள் அணுகும் விதத்தையும், அதிலுள்ள உள்முரண்பாடுகளையும் பகுப்பாய்வு செய்கிறார்.

அடுத்து, இஸ்லாமிய மூலாதாரங்களைப் பொருள்கோடல் செய்வது எப்படி என்பது குறித்த சலஃபிசச் சிந்தனைப் போக்கை, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த இஸ்லாமிய மரபுவாதத்தின் (Islamic Traditionalism) விவாதங்களைத் தவிர்த்துவிட்டுப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் இமாத் ஹம்தா. இந்தப் பின்னணியில், இஸ்லாமிய மரபுவாதத்தின் பிரதான கருத்தாடல்கள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)

நபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க