காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

86 ஆண்டுகள் தண்டனை: சிறையில் வதைப்படும் Dr.ஆஃபியா

ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளைக் கொண்டு நம்மால் விளக்க முடியாது. Dr.ஆஃபியா யார், அவர் எப்படி சிறை சென்றார், அவரை சிறைவைத்திருப்பது யார், என்ன காரணம் அதற்குச் சொல்லப்படுகிறது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க
human rights கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மனித உரிமைச் சொல்லாடல்கள் மீதான விமர்சனம் – நிஷாந்த்

நம்மிடையே புழக்கத்திலுள்ள ‘மனித உரிமை’க்கும், மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக அவை முக்கியமான இடையீட்டையும் பங்களிப்பையும் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இக்கட்டுரையானது சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக் கொண்டு அணுகுவதை விமர்சனத்திற்குட்படுத்துகிறது. இறுதியாக, மனித உரிமைச் சொல்லாடல்கள் நவதாராளவாதச் சிந்தனைகள் வளர்ந்துவந்த சமயத்தில் மீண்டும் புழக்கத்திற்கு வந்ததன் பின்னணியையும் பேசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி முகாம்

“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”   தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு
இரத்தம்  வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வதை முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள்

சீனாவின் கிழக்குப் பிராந்தியமான சிங்ஜியாங் மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்கள் திரைமறைவில் ஒரு கலாச்சாரக் கூட்டுப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு (Human Rights Watch) வெளியிட்ட நீண்ட அறிக்கை உலகை ஒருகனம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சமீபகாலமாக உய்குர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.

மேலும் படிக்க