கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.

மேலும் படிக்க
psychoanalysis tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நவீன மனநல மருத்துவத்தின் வன்முறை

நண்பர்களோடு உளநிலை குறித்து உரையாடும்போது “டிப்ரஷனா இருக்கு..” என்பது தவிர்க்க முடியாத வசனமாகிவிட்டது. கவலை, துக்கம் என உளம் சார்ந்த இயல்பான அனைத்து இடர்பாடுகளும் டிப்ரஷனாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறது. ஏன் தொடர்ந்து அனைவரும் ஒரே விதமாகத் தங்களின் உளநிலையை மொழிப்படுத்துகின்றனர் என்று ஆழ்ந்து பார்த்தால், அதைத்தான் உள மருத்துவர்களும், anti-depressants தயாரிக்கும் நிறுவனங்களும் விரும்புகின்றன என்பது புலப்படும்.

இப்படி மொழி ஒரே விதமாக அமையும்போது உரையாடுவதற்கு வசதியாக அமைந்துவிடுகிறது. உள மருத்துவர்களும் எளிமையாக “உன் செரடோனின் (serotonin) அளவு குறைவாக இருப்பதால்தான் உனக்கு டிப்ரஷன்..” என்று சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. அதற்கான சட்டகமும் அவர்களிடம் இல்லை. ஒரு பாக்டீரியாவை நீக்குவதுபோல அதை நீக்க முனைகிறார்கள். அவ்வளவுதான். மூளையின் வேதியியல் கூறுகளைக் கொண்டு மட்டுமே மானுட நிலைமையை (human condition) சொல்லிவிட முடியுமா?

மேலும் படிக்க
human rights கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மனித உரிமைச் சொல்லாடல்கள் மீதான விமர்சனம் – நிஷாந்த்

நம்மிடையே புழக்கத்திலுள்ள ‘மனித உரிமை’க்கும், மனித உரிமை அமைப்புகளின் சொல்லாடல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. அன்றாட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக அவை முக்கியமான இடையீட்டையும் பங்களிப்பையும் செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், இக்கட்டுரையானது சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அரசியல் வன்முறைகளை மனித உரிமைச் சொல்லாடல்களைக் கொண்டு அணுகுவதை விமர்சனத்திற்குட்படுத்துகிறது. இறுதியாக, மனித உரிமைச் சொல்லாடல்கள் நவதாராளவாதச் சிந்தனைகள் வளர்ந்துவந்த சமயத்தில் மீண்டும் புழக்கத்திற்கு வந்ததன் பின்னணியையும் பேசுகிறது.

மேலும் படிக்க