kayalpattinam shuaib குறும்பதிவுகள் 

புத்தக மனிதர் சுஐபு காக்கா

அமெரிக்காவாழ் இந்தியரொருவர் சுஐபு காக்காவின் புத்தகங்களை அப்படியே விலைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனச் சொன்னார். மூத்த ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனின் வழிகாட்டுதலின்படி சுஐபு காக்காவின் மொத்த நூல் சேகரம் அவர் மிகவும் நேசித்த காயல்பட்டினம் அரசு நூலகத்தில் சேர்க்கப்பட்டு அவரது பெயரிட்ட தனியடுக்கில் வைக்கப்படவுள்ளன.

மேலும் படிக்க
malcom x tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

மேலும் படிக்க
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

புத்த, சமண கோவில்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்படவில்லையா?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோவிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோவில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதாம். இந்த அடிப்படையில்தான் கஜினி முகம்மது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவுமே கோவில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோவில்களையோ, தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோவில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோவில்களும் இடிக்கப்பட்டன.…

மேலும் படிக்க
beast review குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பீஸ்ட்: விமர்சனம் எழுதக்கூட தகுதியற்ற குப்பை – ப. பிரபாகரன்

FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.

நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க
pakistan issue tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இம்ரான் கான் பதவி நீக்கம்: மகிழ்ச்சியில் சவூதி, யுஏஇ அரசுகள்

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமர் பதவிலிருந்து விலக்கப்பட்டதை சவூதி அறபியா, ஐக்கிய அறபு அமீரகம் (யுஏஇ) மற்றும் மேற்குலக தீவிர வலதுசாரி சக்திகள் வரவேற்று மகிழ்கின்றனர். இந்த அறபு நாடுகள் தங்களை இஸ்லாம் நீக்கம் செய்துகொண்டிருக்கும் இச்சமயத்தில் இஸ்லாமுக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசுவதையும், முஸ்லிம் உலகில் அவருக்கு செல்வாக்கு அதிகரிப்பதையும் இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

சவூதி அறபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் தனது ராஜ்யத்தை இஸ்லாம் நீக்கம் செய்துகொண்டு, அதன் வெளியுறவுக் கொள்கையையும் அதற்குத் தோதுவாக அமைத்துக்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு அல்-அக்சா பள்ளிவாசலின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தபோதும், கஸ்ஸா மீது அது குண்டு மழை பொழிந்தபோதும் அவை பற்றிய இஸ்ரேலியக் கதையாடலை வரித்துக்கொண்ட சவூதி ஊடகம், கூச்ச நாச்சமின்றி ஃபலஸ்தீனர்களைக் குற்றப்படுத்தியது. ஆனால் அந்தச் சமயத்தில் இம்ரான் கான் இஸ்ரேலின் அடக்குமுறையைக் கண்டித்தார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

கர்நாடகா: PFI, SDPI-க்குத் தடை கோரியதா காங்கிரஸ்?

முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி, மசாலா தூவித் தந்துகொண்டிருக்கின்றன செய்தி ஊடகங்கள். பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி குளிர்காய்வதே அவற்றின் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் டிஜிட்டல் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகத்துக்கு அந்தச் செய்தியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியெல்லாம் அவை பொருட்படுத்துவதே இல்லை.

அல்காயிதா இயக்கத் தலைவர் ஹிஜாப் தடை பற்றி பேசியிருப்பதாக வந்துள்ள செய்தியை தற்போது எல்லா ஊடகங்களும் மிதமிஞ்சி கவனப்படுத்தி வருகின்றன. அதைப் பல கோணங்களில் போஸ்ட் மார்ட்டமும் செய்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க
fir movie review tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

FIR முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படமா?

மனு ஆனந்த் என்பவர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் FIR. விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு திரில்லர் படமாக இது வெளிவந்துள்ளது. அவ்வளவு ரசிக்கும்படியாகவோ நேர்த்தியாகவோ இது எடுக்கப்படவில்லை என்பதால் பார்வையாளர்களை எந்தளவுக்கு ஈர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் மீது அச்சத்தை அதிகரிக்கச் செய்தல், ‘கெட்ட முஸ்லிம்களை’ அழித்தல் போன்றவை மூலம் அவர்களுக்குக் கிளர்ச்சியூட்ட முயல்கிறது இப்படம்.

மேலும் படிக்க
சர்மிளா சையத் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஷர்மிளா ஸெய்யித் எனும் தொழில்முறை முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரகர்

இன்று இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவது ஒரு லாபம் கொழிக்கும் தொழில். அதை செவ்வனே செய்து பெயர், புகழ், பணம், அதிகாரம் என அனைத்தையும் பெற முடிகிறது. ஷர்மிளா போன்ற பல இஸ்லாம் வெறுப்புப் பிரச்சாரகர்களுக்குள் இருக்கும் பொது அம்சங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்: முஸ்லிம்/ பெண் அடையாளம், Victim playing, சர்வதேச அங்கீகாரம், விருதுகள் பெறுதல், மேலை நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெறுதல்.

தமிழகத்து முற்போக்கு சக்திகள் இவரைப் போன்ற உதிரிக்கு இடமளித்து முஸ்லிம்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுகோள். சிஏஏ, சிறைவாசிகள் விடுதலை, ஹிஜாப் உள்ளிட்ட எல்லா உரிமைப் போராட்டங்களிலும் களமாடும் முஸ்லிம் பெண்கள்தாம் அந்தச் சமூகத்தின் பெண் பிரதிநிதிகள். ஷர்மிளா ஸெய்யித் அல்ல.

மேலும் படிக்க
பாத்திமா சேக் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஃபாத்திமா ஷேக்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காகத் தன் இல்லத்தைப் பள்ளிக்கூடமாக்கியவர்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்று அறியப்படும் கல்வியாளர் ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191வது பிறந்தநாளான இன்று, அவரை கூகுளின் டூடுல் சிறப்பித்துள்ளது. இதையொட்டி முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தன் முகநூல் பக்கத்தில் ஃபாத்திமா ஷேக் குறித்து பகிர்ந்துள்ள பதிவின் சுருக்கம் இது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இளைய தலைமுறையை படுகுழியில் தள்ளும் ஆபாசம் – உம்மு ஃகாலிது

“இளைய தலைமுறையினரிடம் நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் பரவலாக்கினால் எந்தவொரு நாட்டையும் யுத்தமின்றி அழித்துவிட முடியும்” என்பார் சலாஹுதீன் அய்யூபி. உண்மையில், சமூகத்தில் அழிவை உண்டாக்கும் இந்த விஷயங்களை இன்று நாம் பரவலாகக் காண முடிகிரது. நிர்வாணமும் கட்டற்ற விபச்சாரமும் விஸ்வரூபமெடுத்திருக்கின்றன.

மேலும் படிக்க