கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பஞ்சாப்: ஆம் ஆத்மியின் வெற்றியும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் – ப்ரீத்தம் சிங்

பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது, ஆம் ஆத்மி கட்சி மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக மேட்டுக்குடியினரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து கட்டுப்படுத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாணி குறித்துப் பலத்த சந்தேகங்கள் உள்ளன. பஞ்சாபியர்கள் டெல்லி தர்பாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட வரலாற்று மரபு உள்ளது. கேஜ்ரிவாலும் அவரது டெல்லி கூட்டாளிகளும், பஞ்சாபி அரசியல் பண்பாட்டின் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தைத் தாமதமாக உணர்ந்திருந்தாலும், இறுதியில் பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்தனர். மான், எந்த நிர்வாகத் திறமைக்கும் பெயர் பெற்றவராக இல்லாவிட்டாலும், ஊழலற்ற, எளிமையான வாழ்க்கை முறைக்கும் செயல்பாட்டிற்கும் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கெஜ்ரிவாலின் டெல்லி ஆட்சி மீது ஈர்ப்புக் கொண்டு, பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்ற கதையைப் பரப்பும் பல வர்ணனையாளர்களைப் போலல்லாமல், மானின் நேர்மையும் பிரபலமும்தான் பஞ்சாபி மக்களை ஆம் ஆத்மிக்கு ஈர்த்துள்ளது.

இதன் குறிப்பிடத்தக்க உட்பொருள் என்னவென்றால், கெஜ்ரிவால் மான்னையும் பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசாங்கத்தையும் கைப்பாவையாக ஆக்கிக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டால், காங்கிரஸ்-அகாலி மேட்டுக்குடிகள் தோற்பதற்கு வழிவகுத்த மக்கள் சினம் கெஜ்ரிவாலை நோக்கியும் திரும்பக்கூடும்.

மேலும் படிக்க