சிறுகதை முக்கியப் பதிவுகள் 

போக்கிடமற்றவர்கள்

Loading

காலையில் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் வெளியே களேபரமும்   அழுகை சத்தமுமாக இருக்க பதட்டத்துடன் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார் வஹாப். அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக தெரு முனையில் புல்டோசர் வாகனமும் ஒரு லாரியில் ஆட்களும் வந்து இறங்கி நின்றிருந்தார்கள். நீர் நிலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி உத்தரவு என்று ஜீப்பில் வந்த அதிகாரிகள் குடிசைவாசிகளிடம் மிரட்டலாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

நான் எழுத்தணிக் கலையை கலைக்கூடங்களிலிருந்து தெருக்களுக்குக் கொண்டுசெல்கிறேன்! — கரீம் ஜப்பாரி

Loading

கரீம் ஜப்பாரி — உலகப் புகழ்பெற்ற எழுத்தணி மற்றும் ஒளிக் கலைஞர். ஒளியின் மீதும் எழுத்துகளின் மீதும் அவருக்குள்ள ஆர்வம், பண்டைய கூறுகளை நவீன வடிவமைப்பில் இணைக்கும் அவரது ஆர்வத்தால் உத்வேகம் கொள்கிறது.

எழுத்தணி வழியாகக் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் இணைக்கும் பாலங்களை அமைப்பதே அவரது கலையின் முக்கிய நோக்கம். அவர் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், பாரம்பரிய வடிவங்களையும் பாணிகளையும் தக்கவைத்துக்கொள்கிறார்.

தனித்துவமான கலை, எழுத்தணியின் எதிர்காலம் ஆகியவை குறித்து கரீம் ஜப்பாரியுடன் பைதுல் ஃபன் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கட்டுறுதி கொண்டவராக இருப்பதன் முக்கியத்துவம்

Loading

இஸ்லாம் ஆர்வமூட்டும் விளையாட்டு மரபுகள் மனம், உடல், ஆன்மா அனைத்தையும் ஒருசேர வலுப்படுத்துகின்றன. இஸ்லாத்தில் விளையாட்டிற்கு உடல் ரீதியான பயனையும் தாண்டி ஓர் உயர்ந்த நோக்கம் உள்ளது. அதுதான் ‘ஃபனா’ (fana) — அதாவது மனிதன் தனது ஈகோவை அல்லது சுயத்தைப் பூஜ்யமாக்கி, தன் நாட்டங்களை அல்லாஹ்வின் நாட்டத்தோடு இணைப்பதாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆலி முஸ்லியார்: மலபார் புரட்சியின் தலைமகன்

Loading

ஆலி முஸ்லியார் வெளிப்படுத்திய வார்த்தைகள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவரது தீரத்தைக் காட்டுகின்றன: “நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். விரைவில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் மரண தண்டனையைப் பற்றிய எண்ணம் எங்களைச் சிதைக்கவில்லை. எங்களைப் போன்ற நிரபராதிகள் அனுபவிக்கும் இந்த வலியும் துயரமும் ஒருபோதும் வீண் போகாது என்ற சிந்தனையே எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலம் கடந்தும் கனலும் பெருநெருப்பு

Loading

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

நோன்பின் நோக்கம்

Loading

தக்வா என்பது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு, அவன் அமைத்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. தக்வா என்பது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவது. தக்வா என்பது அவன் செய்ய வேண்டும் என்று கூறியவற்றைச் செய்வதும் அவன் விலகியிருக்க வேண்டும் என்று கூறியவற்றிருந்து விலகியிருப்பதும் ஆகும். நோன்பு அப்படியான, நேர்த்தியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பயிற்சி. நோன்பின் வழியாக மனிதர்கள் அந்த உயர்நிலையை அடைய முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நாய்களுக்கு கிடைக்கும் நீதி, செயற்பாட்டாளர்களுக்கு இல்லை!

Loading

2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அந்த உள்ளார்ந்த அநீதிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழும் என்று நினைத்தேன். ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களின் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பகுதிகளில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் வெளிப்படுத்திய கோபத்திலிருந்து எனக்கு இந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ‘முஸ்லிம்களை விட நாய்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ — கசப்பினால் மட்டும் நான் இவ்வாறு கூறவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள்

Loading

பிணை இன்றி நீண்டகாலச் சிறைவாசம், நீண்டகாலச் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை என்று யுஏபிஏ பலரின் வாழ்க்கையைச் சீரழித்துவந்தாலும் அரசியல்வாதிகள் இதில் உரிய அக்கறை காட்டுவதில்லை. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என யாரும் இதில் விதிவிலக்கில்லை. பண மோசடி வழக்கை எதிர்த்துக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் யுஏபிஏ வழக்குகளில் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை.

பயங்கரவாதக் குற்றச்சாட்டு, பிணை மறுப்பு, நீண்டகாலச் சிறைவாசம், பல்லாண்டுகளுக்குப் பின்னர் விடுதலை, மறுக்கப்படும் நிவாரணம், பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்கள், உள மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என யுஏபிஏ வழக்குகள் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவரும் நிலையில் அதனைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் சமூகத்தில் எழுவது அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘இந்துச் சமூகமே உச்சத்தில் இருக்க வேண்டும்!’
சில வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் மத அடிப்படையில் விண்ணப்பங்களை வடிகட்டுவது ஏன்?

Loading

இத்தகைய வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், வெற்றிடத்திலிருந்து தோன்றியவையல்ல. அவை, முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘மொஹப்பத் கா ஷர்பத்’ ஒன்றும் ‘ஷர்பத் ஜிஹாது’ இல்லை!
ரூஹ் அஃப்ஸாவை ஆயுதமாக்கும் உணவு அரசியல்

Loading

ஒரு காலத்தில் ஒற்றுமையின் சின்னமாகக் திகழ்ந்த ரூஹ் அஃப்ஸா, இன்று பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சில் பகடையாக மாறியுள்ளது. பாபா ராம்தேவ் இதனை ‘ஷர்பத் ஜிஹாது’ என்று அடையாளப்படுத்தியிருப்பது, ஒன்றிணைக்க வேண்டிய உணவு எவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக ஆயுதமாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பகிர்ந்து உண்ட நமது உணவு மேசைகள், இதுபோன்ற பிளவுகளிலிருந்து என்றேனும் விடுபடுமா என்று வினவுகிறார் ஸதஃப் உசைன்.

மேலும் படிக்க