நாய்களுக்கு கிடைக்கும் நீதி, செயற்பாட்டாளர்களுக்கு இல்லை!
2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அந்த உள்ளார்ந்த அநீதிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழும் என்று நினைத்தேன். ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களின் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பகுதிகளில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் வெளிப்படுத்திய கோபத்திலிருந்து எனக்கு இந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ‘முஸ்லிம்களை விட நாய்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ — கசப்பினால் மட்டும் நான் இவ்வாறு கூறவில்லை.
மேலும் படிக்க