கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள்

Loading

பிணை இன்றி நீண்டகாலச் சிறைவாசம், நீண்டகாலச் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை என்று யுஏபிஏ பலரின் வாழ்க்கையைச் சீரழித்துவந்தாலும் அரசியல்வாதிகள் இதில் உரிய அக்கறை காட்டுவதில்லை. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என யாரும் இதில் விதிவிலக்கில்லை. பண மோசடி வழக்கை எதிர்த்துக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் யுஏபிஏ வழக்குகளில் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை.

பயங்கரவாதக் குற்றச்சாட்டு, பிணை மறுப்பு, நீண்டகாலச் சிறைவாசம், பல்லாண்டுகளுக்குப் பின்னர் விடுதலை, மறுக்கப்படும் நிவாரணம், பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்கள், உள மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என யுஏபிஏ வழக்குகள் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவரும் நிலையில் அதனைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் சமூகத்தில் எழுவது அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பயத்தால் மௌனிக்கப்பட்டவர்கள்
இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நெருக்கடி

Loading

இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கான சொந்தக் குரலைக் கொண்டிருப்பதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் இதே நிலைதான். உதாரணமாக, தேசியவாதத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம் கருத்து தெரிவித்தால், அவன் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான். இதுபோன்ற முத்திரைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, முஸ்லிம் அல்லாதவர்களை மேற்கோள் காட்டியே தங்கள் கருத்துகளை நியாயப்படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த வகையில், கூட்டணிகளை அமைத்தே தீர வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தனிமையில் என் புத்தகங்களுடன்…
சிறையிலிருந்து ஷர்ஜீல் இமாம்

Loading

எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரத்யேக நேர்காணலில், திகார் மத்திய சிறையில் இருக்கும் 37 வயதான ஷர்ஜீல் இமாம் தனது சிறைவாசம், வாசிக்கும் புத்தகங்கள், சக கைதிகள், தனது பூனை நண்பர்கள் ஆகியோர் பற்றித் தம்முடைய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வெளியுலக நிகழ்வுகளுடன் இணைய விரும்பும் அவர் தனது தாயின் உடல்நிலை குறித்துக் கவலையை வெளிப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து வியப்பும் உற்சாகமும் அடைந்துள்ளார். தனது முனைவர் பட்டத்தை நிறைவுசெய்ய முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு காஸா குழந்தையின் உயில்!

Loading

“நான் உயிர்த் தியாகி ஆகிவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் இது எனது உயில்: எனக்காக நீங்கள் அழ வேண்டாம்; ஏனென்றால் உங்கள் அழுகை எனக்கு வலி தருகிறது. என் உடைகள் தேவையுடையவர்களுக்குக் கொடுக்கப்படும் என்று நம்புகிறேன். என் பொருட்கள் றஹஃப், சாரா, ஜூடி, லானா, பதூல் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்னுடைய மணிகளை அஹ்மதுக்கும் றஹஃபுக்கும் கொடுத்துவிடுங்கள். எனது மாதாந்திரத் தொகை 50 ஷெகல்களில் 25ஐ றஹஃபிற்கும், 25ஐ அஹ்மதுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய கதைப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் றஹஃபிற்கும், விளையாட்டுச் சாமான்களை பதூலிற்கும் கொடுத்துவிடுங்கள். என் சகோதரன் அஹ்மதைத் திட்ட வேண்டாம். தயவுசெய்து என்னுடைய இந்த விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சின்வாரின் கைத்தடி!

Loading

“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்.” – யஹ்யா சின்வார்

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யாவின் உயிர்த் தியாகமும், ஃபலஸ்தீனப் போராட்டத்தின் எதிர்காலமும்

Loading

ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஸாவின் மருத்துவமனைகளில்…

Loading

ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார்

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அத்துடன் இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்

Loading

தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?

மேலும் படிக்க