நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘காதலின் நாற்பது விதிகள்’ நாவலின் வரலாற்றுப் பின்னணி

பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பது ‘அனடோலியா’வில் (துருக்கி சாம்ராஜ்யம்) மிகவும் கொந்தளிப்பான காலம். அரசியல் மோதல்களும் முடிவற்ற அதிகாரப் போட்டிகளும் மதச் சண்டைகளும் நிகழ்ந்திருந்த காலம் அது. மேற்கில், ஜெருசலேம் நோக்கிப் படையெடுத்த சிலுவைச் சேனை ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ என்னும் இஸ்தான்பூலைச் சூறையாடியது. அதன் விளைவாக பைஸாந்தியப் பேரரசு இரண்டாகப் பிளந்தது. கிழக்கில், செங்கிஸ் கானின் ராணுவ மேதைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் முன்னேறிய மங்கோலியப் படை துரிதமாகப் பரவி வந்தது. இரண்டிற்கும் இடையில் பல்வேறு துருக்கி இனக்குழுக்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. பைஸாந்தியர்கள் தாம் இழந்த நிலம், செல்வம் மற்றும் அதிகாரத்தை மீட்கப் போராடினர். எப்போதும் இல்லாத குழப்பம் கோரத் தாண்டவம் ஆடியது. எப்பக்கம் திரும்பினாலும் அங்கே பகைமையும் வெறுப்பும் இருந்தன. மேலும், அடுத்து என்ன நிகழுமோ என்ற பேரச்சம் கண் முன் நின்றது.

மேலும் படிக்க
sharjeel imam article நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஷர்ஜீல் இமாமின் எழுத்துகள் விவாதிக்கின்றன. அவை காத்திரமான மாற்றுப் பார்வைகளை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன.

தெரிவுசெய்யப்பட்ட அவரின் கட்டுரைகளையும் பேச்சுக்களையும் தொகுத்தளிக்கிறது இந்நூல். முஸ்லிம் விவகாரம் சார்ந்த பல விவாதங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க