கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 7

Loading

மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம். இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள். அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 6

Loading

ஒரு நற்செயல் செய்யும்போது மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்த சுவனம். பாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சி அவன் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டேயிருக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 5

Loading

நம் உலகம் விசாலமாக விசாலமாக நம் மனதும் விசாலாமாகிக் கொண்டே செல்லும். அது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து பெரிதும் தாக்கமடையக்கூடியது. அறிதல்கள் நம் மனதை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றன. அந்த அறிதல்களை நாம் பரந்துவிரிந்த இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் பெற முடியும். அது மௌன மொழியில் நமக்கு உணர்த்தும் அறிதல்கள் எண்ணிக்கையற்றவை. அவை மனதின் வெளியை விசாலமாக்கக்கூடியவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -4

Loading

மனித மனதிற்கு கடிவாளங்கள் அவசியம். அது ஒருபுறம் கடிவாளங்களை வெறுத்தாலும் இன்னொரு புறம் அவற்றை விரும்பவும் செய்கிறது. ஏனெனில் அது தன்னை நினைத்து பயப்படுகிறது. தன் ஆசைகள் தன்னை படுகுழியில் தள்ளிவிடாமலிருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. அதனால்தான் அது சில சமயங்களில் தன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களைக்கூட விரும்புகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -3

Loading

எது மனிதனை அதிகம் அச்சுறுத்துகிறதோ, எதை அவன் அதிகம் விரும்புகிறானோ, எதை அவன் அதிகம் வெறுக்கிறானோ அவற்றைப் பற்றியெல்லாம் அவன் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறான். பேசிப் பேசி விருப்பையும் வெறுப்பையும் தீர்த்துக் கொள்கிறான்; அச்சத்திலிருந்து விடுபட முனைகிறான். பேச்சு ஒன்றுதானே மிக இலகுவான வழி.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 2

Loading

ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான, தனக்குப் பிரியமுள்ள இன்னொரு ஆன்மாவிடம் மொழியின்றி பேசுகிறது. அது என்ன சொல்ல, என்ன செய்ய விரும்புகிறது என்பதை சொல்லாமலேயே அறிந்துகொள்கிறது. நாம் பேசும் மொழி நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். பல சமயங்களில் அது உள்ளத்திற்கு மாற்றமானவற்றையும் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தின் மொழி அப்படியல்ல. அது உள்ளதை உள்ளபடியே உணர்த்திவிடும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 1

Loading

ஆன்மிகத்தின் மையமே மனம்தான். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது ஒன்றே மிகச் சிறந்த வழி. லௌகீகம் கலக்காத உண்மையான ஆன்மீகம் உங்கள் ஆன்மாவுக்கான ஒத்தடம். உங்களின் ஆன்மா உயர வேண்டுமெனில் அது தேவையற்ற கவலைகளிலிருந்தும் பயங்களிலிருந்தும் விடுபட வேண்டுமெனில் அது நிம்மதியை உணர வேண்டுமெனில் ஆன்மீகத்தின் பக்கம் அடைக்கலம் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்க்கையும் வலிகளும்

Loading

தர்க்கங்களால் சூழப்படாத எளிய நம்பிக்கையே சிறந்தது. அது ஒரு சிறு குழந்தை தன் தாயின் மீது வைக்கும் நம்பிக்கையைப்போல. உண்மையில் அதுதான் சரியான நம்பிக்கையும்கூட. அனைத்து அதிகாரங்களும் அவன் கைவசம்தானே உள்ளது. நம்மிடம் இருப்பவைகூட நம் அனுமதிகொண்டு இயங்குபவை அல்லவே. நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது காப்பாற்றுபவன் அவனே. நாம் நோயுற்றால் குணமளிப்பவனும் அவனே. அவனைத் தவிர வேறு எங்கும் நமக்கு அடைக்கலம் இல்லை என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

கருத்து மோதல்கள்

Loading

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. முட்டி மோதி நாம் சரியானவற்றை அடையலாம். தகுதியானவை நிலைபெறுகின்றன. மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. கருத்துகள் மாறக்கூடியவை. அவை கால, இட சூழல்களுக்கேற்ப மனநிலை அடையும் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கின்றன. கருத்துகளோடு நம் ஈகோவை கலந்துவிட்டால், அவற்றை அரசியல் நிலைப்பாடுகளாக மாற்றிவிட்டால் அவற்றிலிருந்து விடுபடுவது கடினம். அப்போது அவை நம்மை சிறைப்படுத்தும் சிறைச்சாலைகளாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

Loading

எல்லாம் ஒரு கனவுபோல நிகழ்ந்துவிடுகின்றது. கனவுக்கும் நிஜத்திற்கும் மத்தியிலுள்ள மெல்லிய திரை சில சமயம் அகற்றப்பட்டுவிடுகிறது. நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க