கட்டுரைகள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 6

ஒரு நற்செயல் செய்யும்போது மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்த சுவனம். பாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சி அவன் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டேயிருக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 5

நம் உலகம் விசாலமாக விசாலமாக நம் மனதும் விசாலாமாகிக் கொண்டே செல்லும். அது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து பெரிதும் தாக்கமடையக்கூடியது. அறிதல்கள் நம் மனதை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றன. அந்த அறிதல்களை நாம் பரந்துவிரிந்த இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் பெற முடியும். அது மௌன மொழியில் நமக்கு உணர்த்தும் அறிதல்கள் எண்ணிக்கையற்றவை. அவை மனதின் வெளியை விசாலமாக்கக்கூடியவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -4

மனித மனதிற்கு கடிவாளங்கள் அவசியம். அது ஒருபுறம் கடிவாளங்களை வெறுத்தாலும் இன்னொரு புறம் அவற்றை விரும்பவும் செய்கிறது. ஏனெனில் அது தன்னை நினைத்து பயப்படுகிறது. தன் ஆசைகள் தன்னை படுகுழியில் தள்ளிவிடாமலிருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. அதனால்தான் அது சில சமயங்களில் தன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களைக்கூட விரும்புகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அநியாயம், அநியாயம்

நீதி என்பது இவ்வுலகில் செயல்படும் மாறா நியதிகளுள் ஒன்று. மனிதர்கள் நீதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அது தனக்கான இடத்தைப் பெற்றே தீரும். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு வடிவில் தனக்கான இடத்தை அடைந்தே தீரும். அநியாயக்காரர்கள் தற்காலிகமாக தப்பித்துவிட்டாலும் தங்களின் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தண்டிக்கப்பட முடியாத உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டாலும் ஏதேனும் ஒரு வடிவில் தாங்கள் செய்த அநியாயங்களுக்கான விளைவுகளை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பெண் என்பவள்…

பெண்ணியம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு. அதன் கண்ணோட்டத்தில் நின்று நாம் பெண்களைப் பார்த்தால் ஏமாந்துவிடுவோம். ஆண்களுக்கு எதிராக அது உருவாக்கி வைத்திருக்கும் சொல்லாடல்கள் போட்டி மனப்பான்மையை, காழ்ப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதன் கண்ணோட்டங்கள் பெரும்பாலும் பாசாங்கானவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

இரவில் வெளிப்படும் மனிதன் வேறு. பகலில் வெளிப்படும் மனிதன் வேறு. பகல் அவனை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அவன் தவறு செய்ய அஞ்சுகிறான், வெட்கப்படுகிறான். இரவு அப்படியல்ல. அது அவனை மூடி மறைக்கிறது. இரவுக்குள் செல்லச் செல்ல அவனது மிருக உணர்ச்சி கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. அது அவனது அறிவை மழுங்கடிக்கும் எல்லை வரை செல்கிறது. இரவில் விரைவாகத் தூங்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். தூக்கம் பெரும் திரையாக உருவெடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

மனிதனின் அகத்திற்கும் புறத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அகத்தில் உள்ளதே புறத்திலும் வெளிப்படும். நாவு சொல்லும் பொய்யையும் புறத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் உண்மையாளரா, பொய்யரா என்பதை நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடியும். பல சமயங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தே நாம் அவரைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆன்மாவின் வெளிச்சமும் இருளும் அவரது முகத்திலும் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க