குறும்பதிவுகள் 

பாவத்தின் வசீகரம்

Loading

பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தன்னிறைவு

Loading

நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யார் மாதிரியும் ஆக வேண்டாம். இங்கு ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்புதான். ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. உங்களின் திறமைகளை, செல்வங்களை, நேரங்களை முடிந்த மட்டும் நல்வழியில் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். இறைவன் உங்களுக்கு எந்தப் பாதையை இலகுபடுத்தித் தருகிறானோ அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. எந்தப் பணியில் நீங்கள் மனதிருப்தி அடைகிறீர்களோ அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

Loading

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 8

Loading

வாழ்வின் இரகசியங்கள் என்றும் முடிவடையாதவை. ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் எளிதில் சலிப்படைவதில்லை. ஆன்மீக வாழ்வு லௌகீக வாழ்வு போன்று குறுகியதும் அல்ல. அது எல்லையற்ற பெருவெளி. அங்கு அறிதல்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். தகவல்கள் மனிதனை எளிதில் சலிப்பில் ஆழ்த்திவிடுகின்றன. அறிதல்கள் அப்படியல்ல. ஒரு ஆன்மீகவாதியால் இறுதிவரை இயங்கிக் கொண்டேயிருக்க முடிகிறது, அவர் மரணத்தின் வாசனையை அருகாமையில் உணர்ந்தாலும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 7

Loading

மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம். இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள். அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 6

Loading

ஒரு நற்செயல் செய்யும்போது மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்த சுவனம். பாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சி அவன் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டேயிருக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 5

Loading

நம் உலகம் விசாலமாக விசாலமாக நம் மனதும் விசாலாமாகிக் கொண்டே செல்லும். அது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து பெரிதும் தாக்கமடையக்கூடியது. அறிதல்கள் நம் மனதை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றன. அந்த அறிதல்களை நாம் பரந்துவிரிந்த இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் பெற முடியும். அது மௌன மொழியில் நமக்கு உணர்த்தும் அறிதல்கள் எண்ணிக்கையற்றவை. அவை மனதின் வெளியை விசாலமாக்கக்கூடியவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 2

Loading

ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான, தனக்குப் பிரியமுள்ள இன்னொரு ஆன்மாவிடம் மொழியின்றி பேசுகிறது. அது என்ன சொல்ல, என்ன செய்ய விரும்புகிறது என்பதை சொல்லாமலேயே அறிந்துகொள்கிறது. நாம் பேசும் மொழி நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். பல சமயங்களில் அது உள்ளத்திற்கு மாற்றமானவற்றையும் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தின் மொழி அப்படியல்ல. அது உள்ளதை உள்ளபடியே உணர்த்திவிடும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 1

Loading

ஆன்மிகத்தின் மையமே மனம்தான். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு, கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது ஒன்றே மிகச் சிறந்த வழி. லௌகீகம் கலக்காத உண்மையான ஆன்மீகம் உங்கள் ஆன்மாவுக்கான ஒத்தடம். உங்களின் ஆன்மா உயர வேண்டுமெனில் அது தேவையற்ற கவலைகளிலிருந்தும் பயங்களிலிருந்தும் விடுபட வேண்டுமெனில் அது நிம்மதியை உணர வேண்டுமெனில் ஆன்மீகத்தின் பக்கம் அடைக்கலம் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்க்கையும் வலிகளும்

Loading

தர்க்கங்களால் சூழப்படாத எளிய நம்பிக்கையே சிறந்தது. அது ஒரு சிறு குழந்தை தன் தாயின் மீது வைக்கும் நம்பிக்கையைப்போல. உண்மையில் அதுதான் சரியான நம்பிக்கையும்கூட. அனைத்து அதிகாரங்களும் அவன் கைவசம்தானே உள்ளது. நம்மிடம் இருப்பவைகூட நம் அனுமதிகொண்டு இயங்குபவை அல்லவே. நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது காப்பாற்றுபவன் அவனே. நாம் நோயுற்றால் குணமளிப்பவனும் அவனே. அவனைத் தவிர வேறு எங்கும் நமக்கு அடைக்கலம் இல்லை என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

மேலும் படிக்க