கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தாமிரப்பட்டணம்: தமிழ் எழுத்தில் எழுதப்படாத முதல் தமிழ் நாவல்

Loading

புகழ் வாய்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பாரசீக எழுத்தாளரான பாக்கிர் யஸீது இப்னு மாலிக் அத்தாயி என்பவர் அறபி மொழியில் எழுதிய நெடுங்கவிதையொன்றைத் தழுவி ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் பெயர் கொண்ட நாவலை அர்வி அல்லது அறபுத் தமிழில் எழுதினார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சின்வாரின் கைத்தடி!

Loading

“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்.” – யஹ்யா சின்வார்

மேலும் படிக்க
வங்கதேச மாணவர் போராட்டம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வங்கதேசப் புரட்சி: சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாணவர் எழுச்சி!

Loading

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடி இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார். இப்போது அங்கு இடைக்கால அரசு அமைந்து அதில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இவ்வளவு பெரிய மாற்றம் வங்கதேசத்தில் நிகழ்ந்ததற்குக் காரணமாக அமைந்தது அங்கே ஏற்பட்ட மாணவர் எழுச்சிதான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

கலவர பூமியாக மாறிய பிரிட்டன்

Loading

மேற்குலகிலும் மற்ற பல நாடுகளிலும் வலதுசாரித் தீவிரவாதம்தான் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையைத் தூண்டுகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் பலமான குரல் எழ வேண்டும். அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் வலதுசாரித் தீவிரவாதத்தை தனிக் கவனமெடுத்து முறியடிக்க வேண்டும். இனவாதத்தையும், இஸ்லாமிய வெறுப்பையும் முற்றாக வேரறுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நாடுகள் ‘உண்மையான வளர்ச்சி’யை நோக்கிச் செல்ல முடியும்.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

Loading

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.

இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யாவின் உயிர்த் தியாகமும், ஃபலஸ்தீனப் போராட்டத்தின் எதிர்காலமும்

Loading

ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதி ஒழிப்பா, சாதி ஒளிப்பா?

Loading

நவீன உயர் சாதி இந்தியர்கள் தமது வாழ்க்கை, அதிகாரம், மூலதனம், சமூக அந்தஸ்து என அனைத்தும் சாதியிலிருந்து வந்திருந்தாலும், அவை அனைத்தையும் அனுபவித்துக்கொண்டே, அவை எதையும் மறுக்காமலேயே, சாதி எங்களின் அடையாளமல்ல என்று கூறி சாதியை பொதுவிவாதத் தளத்திலிருந்து மறைக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஸாவின் மருத்துவமனைகளில்…

Loading

ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார்

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அத்துடன் இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க