கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க