தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

Loading

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

Loading

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

Loading

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க
நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

மனிதனும் இஸ்லாமும்

Loading

இச்சுருக்கமான ஏழு உரைகளின் வழியாக ஷரீஅத்தி இஸ்லாமிய சித்தாந்தம், அதன் உலகநோக்கு, மனிதனின் சிறைகள், ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் சுதந்திர சிந்தனையாளரின் பொறுப்பு ஆகியன பற்றி அறிவொளியூட்டும் மனச்சித்திரமொன்றை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க