கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்ஜும் ஜிஹாதும்

Loading

முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம்

Loading

இஸ்லாம் மனிதனின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய தீய உணர்வுகளுடன் போராடும்படி அவனுக்குக் கட்டளையிடுகிறது. அது மனம் எல்லா வகையான உணர்வுகளும் பொங்குமிடம்தான் என்பதையும், ஒவ்வொன்றும் எல்லை மீறவே விரும்பும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி, அவற்றை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான சரியான வழிமுறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. 

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்

Loading

நபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கடவுள் சந்தை: உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்குகிறது?

Loading

அரசு-கோயில்-தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு, பொதுக்களத்தில் இந்துமதச் சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார்களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வெற்றியைத் தீர்மானிப்பது எது?

Loading

அசத்தியத்தின் கரங்கள் ஓங்கும்போது வெளிப்படையான காரணிகள் அதற்குச் சாதகமாகவே தென்படும். அவற்றைக் கண்டு நம்பிக்கையாளர்கள் நிராசையடைந்து விடக்கூடாது. சத்தியம் எல்லாவற்றையும் மிகைக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்பதையும், அது எல்லா தர்க்கங்களையும் தாண்டி மனித மனதிற்குள் நேரடியாக ஊடுருவிச் செல்லக்கூடியது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்வென்பது யாதெனில்…

Loading

வாழ்க்கை என்பது வெறுமனே அனுபவித்தல் மட்டுமல்ல. அப்படியான ஒரு வாழ்க்கையும் மரணமும் ஒன்றுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் இறுதியில் வெறுமையையும் விரக்தியையும் தவிர வேறெதுவும் மிஞ்சப் போவதில்லை. வாழ்வதென்பது இயந்திரங்கள் செயல்படுவதைப்போன்று செயல்படுவது அல்ல. அப்படிப்பட்டவர்களை காலம் விரைவில் மறக்கடித்துவிடும். அவர்களும் தங்களைத் தாங்களே மறந்துவிடுவார்கள். வாழ்க்கை தீராத அறிதலையும் கண்டடைதலையும் வேண்டி நிற்கிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!”

Loading

“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்! – பெரியார்

Loading

“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரியார்

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

“ஒரே நொடியில் ஜாதியை ஒழித்து விட்டேன்”

Loading

தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி அருகே கொடிக்கால் கிராமத்தில் பிறந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘இஸ்லாம் ஏமாற்றவில்லை’ என்கிறார். அநீதியாகத் தம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பிறவி இழிவைத் துடைத்தெறிய இலக்கியம், ஊடகம், பகுத்தறிவு, பொதுவுடைமை, மனித உரிமை எனப் பயணப்பட்டு, வழியெல்லாம் ஏமாற்றத்தில் கரைந்து, இறுதியில் இஸ்லாத்தின் மூலம் தனது இழிவு நீங்கியதைப் பெருமையுடன் விவரிக்கிறார். ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைக்காக, அவர் அனுபவத்தில் தேக்கியவற்றைத் தன் தாய்ச் சமூகத்திடம் வாஞ்சையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை

Loading

இப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க