சிறுகதை முக்கியப் பதிவுகள் 

திரவியம் (சிறுகதை)

ஏதோ ஒரு பொல்லா நாள். மேலதிகாரி இன்ஸ்பெக்சன் வர, கஸ்டம்ஸ் கெடுபிடியில் ஒரே நாளில் பதினைந்து குருவிகளோடு சரக்குகள் மாட்டிக்கொண்டன. சரக்கு என்றால் ஒவ்வொரு குருவி தலையிலும் இரண்டரை லட்சம் மதிப்புள்ள சரக்கு. அப்பாஸ் வாழ்க்கையே மாறிப்போனது. தெரிந்த லாபிகளில் மூவ் செய்தும், சரக்கு கைக்கு வந்துசேரவில்லை. அன்று அணைந்ததுதான் சேட்டின் செல்போன், இன்றுவரை அவரிடம் பேசமுடியவில்லை.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வெறும் சாப்பாட்டுக்கு இவ்ளோ அக்கப்போரா?!

இறந்தவர் தீர்க்கதரிசி போலும். தனது இறுதி நேரத்தைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு அருகிலிருந்த மனைவியை வறுத்தெடுத்து ஆசைஆசையாய்ச் சீனியடை செய்துதரச் சொல்லி சாப்பிட்டுவிட்டே சொர்க்கம் போயிருக்கிறார். தான் வாழ்ந்த காலத்திலும் அவர் டயட், உடல் நலம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர். ’விரும்பியதைச் சாப்பிடணும்’ என்று எப்போதும் சொல்வார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

வசீகரிக்கும் முகல் உணவு!

நூர்ஜஹான் தயிர்மூலம் செய்யப்படும் இனிப்புக்கூழ் வகைகளைப் பிரமாதமாக செய்யக்கூடியவர். மன்னர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் ஒருமுறை படைத்தளத்திற்குச் சென்றபோது வீரர்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு, ‘இறைச்சியோடு அரிசியை மசாலாத் தூள் சேர்த்து வேகவைக்கும்’ முறையை அறிமுகப்படுத்தினார். அப்படிப் பிறந்ததுதான் இன்றும் நம்மைக் கிறங்கடித்துக் கொண்டிருக்கும் ‘பிரியாணி’.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

உம்மாவின் துப்பட்டி (சிறுகதை)

புதிதாக வந்த வெளிநாட்டுத் துப்பட்டி அதுவரை உம்மா உடுத்தியிருந்த ரேசன்கடை இலவச வெள்ளைத்துணிக்கு விடைகொடுத்திருந்தது. உறவுக்காரர்களின் திருமணத்திற்கு இனி சென்றால் பக்கத்துவீட்டு சைனம்புவிடம் இரவல் துப்பட்டி வாங்கி ஏழ்மையை மறைக்கத் தேவையில்லை என்ற உற்சாகம் உம்மாவிற்குப் புதுத்தெம்பைக் கொடுத்தது. அதன் ஓரப்பூக்களில் அத்தாவின் வாசம் இருந்திருக்க வேண்டும். அவரது ஸ்பரிசத்தை அவள் அணியும்போது அது கொடுத்திருக்க வேண்டும். அதன் பூக்களைத் தேடி வந்தடையும் வண்ணத்துப்பூச்சிகள் எங்கோ ஒரு தூரத்தில் புலாவ் பசார் தீவில் சோற்றுப் பானையைக் கிண்டிக்கொண்டிருக்கும் அத்தா அனுப்பியதாக உம்மா உணர்ந்திருப்பாள். அதுதானே அத்தா இறந்து ஏழுவருடங்களுக்குப் பின்னும் அந்தத் துப்பட்டியை உம்மா உடுத்தி வருவதன் காரணமாக இருக்கும்.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

அத்தர் (சிறுகதை)

வெள்ளை உடை தரித்த இரண்டு வீரர்கள் கையில் வாளுடனும் நீண்ட தலைப்பாகையுடனும் காவல் இருக்க, பச்சைத் தலைப்பாகையுடன் நீண்ட வெள்ளைத் தாடியுடன் இஸ்லாமிய ஸூஃபிப் பெரியவர் அகர் கட்டைகளிலான தஸ்பீஹ் மாலையை உருட்டிக்கொண்டிருந்தார். அருகில் மற்றொரு உருவம். ‘மினல்லாஹி இலல்லாஹி… மினல்லாஹி இலல்லாஹி…’ அதன் முதல் மணியை அவரது கட்டைவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் நடுவில் உருட்டியபோது நான் ஓடையிலிருந்து தூக்கியெறியப்பட்டு அவர்களுக்குச் சமீபமாக நின்றுகொண்டிருந்தேன். மலாயன் புலிக்குட்டிகள் நான்கு ‘உர்ரெனச்‘ சுற்றிக்கொண்டிருந்தன.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

சங்குத்தவம் (சிறுகதை)

”இந்தக் காலத்தில் அறபியை மட்டும் படிச்சாப் போதுமா? உலகம் பூரா இங்கிலீஷ்காரன் தன்னோட பாஷையைத் திணிச்சி வச்சிருக்கான்… அதுலேர்ந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று மக்கள் கூடியிருந்த நிஜாமியா வளாகத்தில் நான் காலையில் முழங்கியபோது ஊர் மக்களுக்குக் கலககாரனாகத் தெரிந்தேன். ”கால் காசு படிப்புனாலும் இங்கிருந்து இராம்நாட் கிறிஸ்துவ ஸ்வார்ட்ஸ் ஸ்கூலுக்குத்தான் போகணும்” என்றேன்.

மேலும் படிக்க