ali manikfan tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ மனிக்ஃபான்: பேரண்ட ஆற்றலின் தூதர்

Loading

அந்தக் கல் கட்டடத்தின் வாயிலிற்கு ஓலை கிடுகினாலான கதவு.. சன்னலின் இடத்தில் வட்ட வடிவிலான சிமிட்டி கிராதிகள்.

அந்த கிடுகு , கிராதி துளைகள் வழியாக அரூப மாயாவியான காற்றானது குடிலுக்குள் வருவதும் போவதுமாக இருந்தது. வீட்டின் உள்ளே வாழ்க்கையை அன்றாடம் நகர்த்திச் செல்வதற்குத் தேவையான மிக எளிய தளவாடங்களே இருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அந்த மரத்திலிருந்து பல அடிகள் தள்ளி நின்று நீரூற்றிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

தலைப்பாகையும் கை பனியனும் லுங்கியும் அணிந்திருந்த அவர் எங்கள் நண்பர்கள் குழாமை பனங்கற்கண்டும் எலுமிச்சை சாறும் கலந்த பானகம் தந்து வரவேற்றார். அவர்தான் அலீ மனிக்ஃபான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 5) – சையித் குதுப்

Loading

‘இயற்கை’ என்றால் என்ன? அது இந்த பிரபஞ்சத்தின் பருப்பொருளா? இந்தப் பருப்பொருளின் உண்மைநிலை என்ன? அவர்கள் பருப்பொருள் என்று கூறுவதை நிலையான ஒன்றாக எண்ணினால் அதன் உண்மை நிலையை வரையறுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கும். பருப்பொருள் குறைகிறது, அதிகரிக்கிறது எனில் அதிகரிப்பதுதான் இயற்கையா? அதுதான் பருப்பொருளா? அல்லது இந்த அதிகரிப்பு நிகழும் வடிவம்தான் பருப்பொருளா? இந்தக் கடவுள் ஒரு நிலையில் நிலைத்திருப்பதில்லை! அவர் வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறார், முன்னேறுகிறார்! இவற்றில் எந்த நிலையில் அது மனித அறிவைப் படைக்கும் திறனைப் பெறும்? அதுதான் தன் வடிவத்தை என்றும் இயங்கக்கூடியதாகப் படைத்துள்ளதா? கதிர்களிலிருந்து அணுவை நோக்கி, அணுவிலிருந்து பருப்பொருளை நோக்கி… அணுவிலிருந்து கதிர்களை நோக்கி! இந்தக் கடவுள் எப்போது படைக்கும் திறனைப் பெற்றது? எந்த நிலையில்? எவனது அறிவை இயற்கை படைத்ததோ அந்த மனிதனைப் படைத்தது யார்? அந்த இயற்கை ஆரம்பத்திலேயே அதனைப் படைத்ததா? அல்லது அவனது இருப்பிற்குப் பின்னர் அவனது அறிவைப் படைத்ததா?

மேலும் படிக்க