காணொளிகள் குறும்பதிவுகள் 

ஒரு சிறிய பிரார்த்தனை

Loading

மனிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி ஒருவன் பாவங்களில் மூழ்கியிருப்பான் எனில் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தன் திறமையின் விளைச்சலாகக் கருதிக்கொண்டிருப்பான் எனில் அவன் தனக்கான துன்பங்களை தானே தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

Loading

பெண் குழந்தை பொன்னையும் கொண்டு வரும் என்று நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சொல்லும் நம் வாழ்பனுபவம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்றுதானே. எல்லாம் தன் முயற்சியின், தன் திறமையின், தன் உழைப்பின் விளைவுதான் என்ற எண்ணம் மிக விரைவில் ஒருவனை நிராசையில் ஆழ்த்திவிடலாம். கர்வம் தனக்கு எதிரான நிராசையையும் கொண்டு வரும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி

Loading

பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை

Loading

நியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்

Loading

இத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

Loading

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

மதமாற்றத்தின் அரசியல்!

Loading

அவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு மாற்றத்தை மட்டுமே கொண்டுவந்திருப்பது தெரிகிறது. மொத்தத்தில் பெரும்பாலான பௌத்தர்கள், மதமாற்றத்துக்கு முந்தைய தமது இந்து வழக்காறுகளையும் நம்பிக்கைகளையுமே தொடர்கிறார்கள். எனவேதான், தலித்கள் இஸ்லாத்துக்கு மாறுவதை மூர்க்கமாக எதிர்க்கும் இந்துவெறிக் குழுக்கள், தலித்கள் விரும்பினால் பௌத்தர்களாக மாறிக் கொள்ளலாம் என வாதிடுகின்றன. ஏனெனில், அவர்களின் பார்வையில் பௌத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளைதான்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காலனியத்தின் உண்மை முகம்

Loading

“செவ்விந்தியர்கள் மத்தியில் ‘தனியுடைமை’ எனும் கருத்தாக்கமே இல்லை. கூட்டாக உற்பத்தியில் ஈடுபட்டு, தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதால் ‘சந்தை’ என்ற ஒன்றும் அவர்கள் மத்தியில் இல்லை. எனவே அவர்களை மனிதர்கள் என்று ஏற்க முடியாது. மிருகங்களைப் பிடித்து, பழக்கி, தமது வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோல், செவ்விந்தியர்களையும் அடிமையாக்கி, பழக்கி, கட்டாய உழைப்பில் பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் சரியானதே.”

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? – கோவன் குழுவினர் பாடல்

Loading

டிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.

பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

Loading

பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க