கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு நாள் மனிதர்கள்?!

Loading

“எவனுடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக கடத்தப்படுகின்றதோ அவன் மிகப் பெரிய நஷ்டவாளி.” (பைஹகீ)

இரண்டு நாட்களை ஒரே மாதிரியாக கடத்துபவன் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் என்றால் ‘இரண்டு றமளானை ஒரே மாதிரியாக கடத்துபவர்கள் எத்தகையவர்களாக இருப்பர்?! அப்படி ஒரே மாதிரியான நிலையில் தனது நாட்களை, குறிப்பாக றமளானை கடந்து போகின்றவர்கள் தங்களுடைய நிலை குறித்து அதிகம் சிந்தித்திட, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலம் கடந்தும் கனலும் பெருநெருப்பு

Loading

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

“இஸ்லாம் அன்பையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட மதம்” – பெரியாரின் மீலாது விழா உரை

Loading

இஸ்லாம் ஒரு சமத்துவக் கொள்கை கொண்ட மதமாகும். அதாவது, முகமதிய மதத்தில் மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது. பணக்காரன், ஏழை, படித்தவன் படியாதவன்; இளைத்தவன் பலசாலி என்கின்ற வித்தியாசமில்லாமல் சகலருக்கும் வாழ்வில் சகல உரிமையும் அளிக்கின்றது. மேலும், முகமதிய மதம் ஒற்றுமையையே அதிகமாய்க் கொண்டிருக்கிறது. அதாவது அந்த மதத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதனுக்கு ஒரு சிறு தீங்கு அந்நியனால் செய்யப்பட்டாலும், உடனே அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி தங்களுக்கு வந்ததுபோல் கருதி அவனுக்கு உதவி செய்ய அவசரமாய் முந்துகின்றார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாப்பிளப் பாட்டுகளின் தாய்வேர் தமிழ்

Loading

மலையாளத்தின் மீது ஏற்பட்ட சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக மணிப்பிரவாள நூல்கள் தோன்றின. வைதீக மொழியான சமஸ்கிருதத்துடன் முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அறபியும் தமிழும் இவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தின. எனவேதான் மலையாள மொழியில் காணமுடியாத நூற்றுக்கணக்கான பழந்தமிழ்ச் சொற்கள் மாப்பிள்ளை இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

சனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்

Loading

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனிதனைப் பண்படுத்தும் மார்க்கம்

Loading

இஸ்லாம் மனிதனின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய தீய உணர்வுகளுடன் போராடும்படி அவனுக்குக் கட்டளையிடுகிறது. அது மனம் எல்லா வகையான உணர்வுகளும் பொங்குமிடம்தான் என்பதையும், ஒவ்வொன்றும் எல்லை மீறவே விரும்பும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி, அவற்றை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான சரியான வழிமுறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. 

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 3) – சையித் குதுப்

Loading

ஜாஹிலிய்யாவை அறிந்தவரால்தான் இஸ்லாத்தின் அவசியத்தை, சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் பரிபூரணத் தன்மையையும் ஒத்திசைவையும் அது வெளிப்படுத்தும் உண்மையின் எளிமையையும், அதனைத்தவிர மற்ற கொள்கைகளையும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அறிந்தவரால்தான் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அச்சமயத்தில்தான் இந்த மார்க்கம் உண்மையான அருட்கொடையாகத் தென்படும். அதன் அழகியலும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் நெருக்கமும் மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் மிகப் பெரிய அருட்கொடையாகும். அது மனித இயல்போடு முழுவதுமாக ஒன்றிப் போகக்கூடியது.

மேலும் படிக்க