இலக்கியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும்  தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாப்பிளப் பாட்டுகளின் தாய்வேர் தமிழ்

மலையாளத்தின் மீது ஏற்பட்ட சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக மணிப்பிரவாள நூல்கள் தோன்றின. வைதீக மொழியான சமஸ்கிருதத்துடன் முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அறபியும் தமிழும் இவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தின. எனவேதான் மலையாள மொழியில் காணமுடியாத நூற்றுக்கணக்கான பழந்தமிழ்ச் சொற்கள் மாப்பிள்ளை இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க