காணொளிகள் குறும்பதிவுகள் 

சூஃபி இனாயத் நிறுவிய கம்யூன்

Loading

சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற இஸ்லாத்தின் குறிக்கோளை அடைவதற்கு வெறுமனே ‘செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவது’ மட்டும் போதாது; செல்வம் ஈட்டுவதற்கான ‘உற்பத்தி முறையையே’ புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூஃபி ஷாஹ் இனாயத் (1655-1718), கல்வி மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காக அரசு வழங்கிய விளைநிலத்தில், கூட்டு முறையில் விவசாயம் செய்து, கிடைக்கும் விளைச்சலை எல்லோரும் அவரவரின் தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்ளும் பரிசோதனை முயற்சியை சிந்துப் பகுதியில் வெற்றிகரமாக செய்து காட்டினார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்

Loading

இயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை மறுக்கும் இந்த ஆதிக்கக் கருத்தியல்களின் முன்னால் மற்ற மதங்கள் போல் அது ஒருபோதும் மண்டியிடாது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

Loading

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

ஃபிரான்ஸ் ஃபனானும் இஸ்லாமும்

Loading

அல்ஜீரியாவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையிலான வீரஞ்செறிந்த காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட மரபுதான் ஃபனான் குறிப்பிடும் அந்தத் “தன்னெழுச்சி”. பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகிலும், ஏன் 1940-50கள்வரை கூட உயிர்ப்போடு இருந்த ஓர் போராட்டம் அது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை!”

Loading

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன?’, ‘அதன் நோக்கம் என்ன?’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் கேள்வி-பதில்கள் மொழிபெயர்ப்பு 

ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

Loading

பொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

தண்டனைகளைக் கொண்டு மட்டுமே குற்றங்களை ஒழித்துவிட முடியுமா?

Loading

போர்ச்சுகலின் உதாரணம் கவனத்திற் கொள்ளத் தக்கது. தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியலிலிருந்து போதைப் பொருள் பாவனையை அது நீக்கியிருக்கிறது. இப்போது எவரேனும் போதைப் பொருள் பாவித்தது கண்டுபிடிக்கப்பட்டால் “நல்லுரை மன்றங்களின்” முன் அவர் ஆஜராக வேண்டும். அங்கு அவருக்கு போதைப் பொருள் பாவனையின் அபாயங்கள் பற்றி நிபுணர்களைக் கொண்டு அறிவுறுத்தப்படுவதுடன் உளவியல், மருத்துவ உதவியும் வழங்கப்படும்.

மேலும் படிக்க