நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதன் விளைவு என்னவாக இருக்கும்? – பேரா. அசோக் ஸ்வைன் நேர்காணல்

Loading

ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தையும் ஒபாமா நிர்வாகத்தையும் ஒப்பிட்டால், ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் தாலிபானுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியதுடன், அதன் முன்னணித் தலைவர்களை விடுதலை செய்ய பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. மேலும், தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கைச் செய்துகொண்டு, பன்னாட்டுப் படைகளை ஆஃப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற நாள் குறித்தது. என்றாலும், பைடன் நிர்வாகத்திடம் இந்தக் கடினமாக பணியை ஒப்படைத்துவிட்டது. இவ்விஷயத்தில் பைடன் தன் தலைமைத்துவப் பண்மைக் காட்டியிருக்கிறார். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் தீவிர விமர்சனங்களுக்கிடையேதாம் துருப்புகள் திரும்பப்பெறப்படுகின்றன.

அமெரிக்காவுக்கு இது வெற்றிபெற இயலாத போர்தான். அமெரிக்காவின் தோல்வியை ஒப்புக்கொண்டு போரை நிறுத்தியிருப்பது பைடன் செய்த சரியான காரியம் என்றே சொல்வேன்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

“ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் பாடம் பெற வேண்டும்” – JIH தேசியத் தலைவர் கருத்து

Loading

ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக அங்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் அமைதியற்ற சூழலுக்கும், ரத்தக் களரிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், அந்த நாட்டில் அமைதியும் இணக்கமும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கும் ஆஃப்கன் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கும் இந்த மாற்றங்கள் துணை நிற்கும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க