கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்

Loading

சிஏஏ எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை சிறைவாசியாக ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாம் தனது வழக்கு, கைதுக்கு காரணமான உரை, தனது பேச்சிற்காக அவர் வருத்தப்படுகிறாரா உள்ளிட்ட விசயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் தான் இருந்த போதே டெல்லி கலவர வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, தனது குற்றம் என்ன?’ என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
“எனது நண்பர்கள் என்னிடம் கொஞ்சம் நிதானமாக இருக்குமாறு சொன்னபோது, நான் நேரடியாகவே பதில் கூறினேன். சமூக அறிவியல் மற்றும் இந்தியக் குடியரசில் முஸ்லிம்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற முறையில், மக்களுக்காகப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் முன்னணியில் நிற்பது நமது பொறுப்பு. நாம் நமது பாதுகாப்பான சூழலிலிருந்து (Comfort zone) வெளியே வர வேண்டும்” என்றார் இமாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள்

Loading

பிணை இன்றி நீண்டகாலச் சிறைவாசம், நீண்டகாலச் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை என்று யுஏபிஏ பலரின் வாழ்க்கையைச் சீரழித்துவந்தாலும் அரசியல்வாதிகள் இதில் உரிய அக்கறை காட்டுவதில்லை. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என யாரும் இதில் விதிவிலக்கில்லை. பண மோசடி வழக்கை எதிர்த்துக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் யுஏபிஏ வழக்குகளில் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை.

பயங்கரவாதக் குற்றச்சாட்டு, பிணை மறுப்பு, நீண்டகாலச் சிறைவாசம், பல்லாண்டுகளுக்குப் பின்னர் விடுதலை, மறுக்கப்படும் நிவாரணம், பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்கள், உள மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என யுஏபிஏ வழக்குகள் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவரும் நிலையில் அதனைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் சமூகத்தில் எழுவது அவசியமாகும்.

மேலும் படிக்க