காணொளிகள் குறும்பதிவுகள் 

சூஃபி இனாயத் நிறுவிய கம்யூன்

Loading

சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற இஸ்லாத்தின் குறிக்கோளை அடைவதற்கு வெறுமனே ‘செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவது’ மட்டும் போதாது; செல்வம் ஈட்டுவதற்கான ‘உற்பத்தி முறையையே’ புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூஃபி ஷாஹ் இனாயத் (1655-1718), கல்வி மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காக அரசு வழங்கிய விளைநிலத்தில், கூட்டு முறையில் விவசாயம் செய்து, கிடைக்கும் விளைச்சலை எல்லோரும் அவரவரின் தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்ளும் பரிசோதனை முயற்சியை சிந்துப் பகுதியில் வெற்றிகரமாக செய்து காட்டினார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

Loading

தேசிய உணர்வு கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்குவது ஒன்றுதான் தேசியம் பாசிசமாக மாறாமல் இருப்பதற்கான ஒரே வழி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்

Loading

இயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை மறுக்கும் இந்த ஆதிக்கக் கருத்தியல்களின் முன்னால் மற்ற மதங்கள் போல் அது ஒருபோதும் மண்டியிடாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?

Loading

இஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அது மானிட சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மார்க்கம். நாடு, இனம், மொழி என எந்த வரையறையும் அதனைக் கட்டுப்படுத்தாது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

Loading

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்!

Loading

பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், இன்றும் பாட்லா வீதிகளில் படிந்துகிடக்கும் சாஜித், ஆதிஃப் அமீன், காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா ஆகியோரின் குருதிக்கறை உண்மை மற்றும் நீதிக்கான கேள்விகளை எழுப்பிய வண்ணமிருக்கிறது. நாட்டின் தலைநகரில் வைத்து முஸ்லிம் உடல்கள் மீது நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டத்தை நினைவூட்டும் நாளாகவே செப்டம்பர் 19 இந்திய அரசின் வரலாற்றில் பதிவாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்

Loading

காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

LGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குதல்

Loading

அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு  பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை,  செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

தமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்

Loading

இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

தன்னிடம் இருப்பவற்றை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் என்பதை உணராதவன் அவற்றை தன் திறமையின் விளைச்சலாகக் கருதி கர்வம்கொள்வான். அவற்றைப் பெற்றிராத மற்றவர்களை இழிவாகக் கருதுவான்.

மேலும் படிக்க