காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? – கோவன் குழுவினர் பாடல்

Loading

டிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.

பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உள்ளடக்கும் தேசியமும் விலக்கி நிறுத்தும் தேசியமும்

Loading

தேசிய உணர்வு கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்குவது ஒன்றுதான் தேசியம் பாசிசமாக மாறாமல் இருப்பதற்கான ஒரே வழி.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

Loading

இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?

Loading

1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.
3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.

இந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?

இந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது?

இதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார்? எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்

Loading

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்

Loading

இந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு? அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே! ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்

Loading

சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து

Loading

பெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.

மேலும் படிக்க