சர்மிளா சையத் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஷர்மிளா ஸெய்யித் எனும் தொழில்முறை முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரகர்

Loading

இன்று இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவது ஒரு லாபம் கொழிக்கும் தொழில். அதை செவ்வனே செய்து பெயர், புகழ், பணம், அதிகாரம் என அனைத்தையும் பெற முடிகிறது. ஷர்மிளா போன்ற பல இஸ்லாம் வெறுப்புப் பிரச்சாரகர்களுக்குள் இருக்கும் பொது அம்சங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்: முஸ்லிம்/ பெண் அடையாளம், Victim playing, சர்வதேச அங்கீகாரம், விருதுகள் பெறுதல், மேலை நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெறுதல்.

தமிழகத்து முற்போக்கு சக்திகள் இவரைப் போன்ற உதிரிக்கு இடமளித்து முஸ்லிம்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுகோள். சிஏஏ, சிறைவாசிகள் விடுதலை, ஹிஜாப் உள்ளிட்ட எல்லா உரிமைப் போராட்டங்களிலும் களமாடும் முஸ்லிம் பெண்கள்தாம் அந்தச் சமூகத்தின் பெண் பிரதிநிதிகள். ஷர்மிளா ஸெய்யித் அல்ல.

மேலும் படிக்க
காஞ்சா அய்லய்யா கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத நிந்தனைச் சட்டம்: இஸ்லாமும் சமத்துவம் எனும் கருத்தாக்கமும் – காஞ்சா அய்லய்யா

Loading

கிறிஸ்தவ உலகம் தன் கோளாறைப் புரிந்துகொள்வதுடன், இந்தியக் கிறிஸ்தவத்துக்குள் தீண்டாமையை ஒழிப்பதில் அது ஏன் தோற்றுப்போனது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆக, தெய்வ நிந்தனை என்பதை ஒரு குறிப்பிட்ட கடவுளின் அல்லது இறைத்தூதரின் மீதான தாக்குதலாக மட்டும் பார்க்காமல், கடவுள் விஷயத்தில் மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் நாம் அவ்வாறே நோக்க வேண்டும். இந்தப் புள்ளியிலிருந்தே கடவுள் மற்றும் தெய்வ நிந்தனைகளின் பல்வேறு வடிவங்கள் குறித்த கருத்தாடல் விரிவடைய வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல்!

Loading

சமஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சமஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? – கோவன் குழுவினர் பாடல்

Loading

டிசம்பர் 6 – இந்திய வரலாற்றில் கருப்பு நாள்.

இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள்.

பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழித்த பார்ப்பன ஆதிக்கக் கும்பல்தான், தன்னுடன் பனியாக்களையும் சேர்த்துக்கொண்டு, பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

Loading

பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்! – பெரியார்

Loading

“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரியார்

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்

Loading

இந்தப் பசுவின் பெயரிலான கொலைகளைப் பொறுத்த மட்டில், “பசு என்பது கோமாதா. அதைக் கொல்வதோ புசிப்பதோ ஆகாது. இதைக் கொன்று புசிப்பவர்கள் மிலேச்சர்கள் அல்லது தீண்டத் தகாதவர்கள்” முதலான பழமைவாதப் பிற்போக்குக் கருத்துக்கள் இவற்றின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன. இப்படியான ‘புனிதங்களை’க் காக்கும் அளவிற்கு இங்கே சட்டங்கள் வலுவாக இல்லை, எனவே சட்டங்களை நாமே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதான ஒரு நியாயம் இங்கே கற்பித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்?

Loading

உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்

Loading

இந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு? அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே! ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

மேலும் படிக்க