தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)

Loading

இஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா?!

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)

Loading

நபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க