நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘திருமுகம்’ ஈரானிய நாவல் (அறிமுகம்)

திருமுகம் என்ற நாவல் மனித மனதின் ஐயம் குறித்து, அது உருவாக்கும் கேள்விகள் குறித்துப் பேசுகிறது. நாவலின் நாயகன் யூனுஸின் மனதில் உருவாகும் மெய்யியல் கேள்விகள் இந்த நாவலை முன்னகர்த்திக் கொண்டு செல்கின்றன.

முனைவர் முஹ்ஸின் பாஷா தற்கொலைக்கான காரணங்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதே யூனுஸ் எடுத்துக்கொண்ட முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கரு. யூனுஸின் மனத்தில் உருவாகும் இறைவன் இருக்கிறானா என்ற ஐயமும், முஹ்ஸின் பாஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வியும் யூனுஸின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. யூனுஸின் நண்பர் மஹர்தாத், மஹர்தாத் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜூலியா, யூனுஸூக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான சாயாஹ் எனப் பல்வேறு கதாபாத்திரங்களின் வழி மனித மனதில் ஆதாரமான கேள்விகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லப்படுகின்றன.

மேலும் படிக்க
wajhullah novel tamil mustafa mastoor நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கடவுளை எப்படி உணர்வது?

முஸ்தஃபா மஸ்தூர் ஈரானின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவருடைய நாவல்கள் இருத்தலியல் தொடர்பான விசாரணையை மேற்கொள்பவை. 2001ல் வெளியான ‘திருமுகம்’ அவருடைய நாவல்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மொழிபெயர்ப்பில் 140 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறிய நாவல், இறைமையைப் புரிந்துகொள்வதற்கான திறப்பை வழங்குகிறது.

பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலை அரபி வழியாக பீ.எம்.எம். இர்பான் மொழிபெயர்த்திருக்கிறார். இரண்டு மொழிகளைத் தாண்டி வந்திருந்தாலும் தமிழில் இந்த நாவல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது என்றால், அதற்கு மொழிபெயர்ப்பாளரும் ஒரு காரணம். இஸ்லாமிய உலகின் முக்கியமான இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் பணியைத் தொடங்கியிருக்கும் சீர்மை பதிப்பகத்துக்கு இந்நாவல் பெருமை சேர்க்கும். இந்நாவல் இன்னும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படவில்லை. அதற்கு முன்பாகவே தமிழுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஜனரஞ்சக நடையில் மாபெரும் தத்துவார்த்த விசாரணை – ‘திருமுகம்’ ஈரானிய நாவல்

தத்துவார்த்த பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு ஜனரஞ்சகமான பாரசீக நாவலை அறபி பிரதி வழியாகத் தமிழில் கொண்டு வருவது என்பது உண்மையில் மொழி பாண்டித்தியமும், நாவல் வரைவிலக்கணமும் தெரிந்த விற்பன்னராலே முடியும். ஏற்கனவே அதை கிரானடாவில் நிரூபித்த இர்ஃபான் இதிலும் மிக அழகாக வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கிறார். எழுதியிருக்கிறார் என்று சொல்வதை விட செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலில் விழுதலையும் தொலைத்தலையும் குறித்த கதை. இது மனிதனின் கதை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சாலப் பொருந்தும்.

மேலும் படிக்க