கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அருவமாக்கப்படும் முஸ்லிம்கள்

Loading

கடந்த காலத்தில் இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகள் அரசியல் களத்தில் செய்த பெரிய தவறு முஸ்லிம் சமூகத்தை ஒரு மதம்சார்ந்த மக்கள் தொகுதியாக மட்டுமே முன்வைத்ததும், மதம் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே அரசியலாக்கியதும்தான். அரசியல் கோரிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் முதன்மைப்படுத்தவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்து நாஜிகளை விஞ்சும் இந்துக் கம்யூனிஸ்டுகள்!

Loading

ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையுமே குறிப்பவர் என்ற கருத்தும், அவர்களில் ஒருவரது செயலுக்காக அந்த ஒட்டுமொத்தச் சமூகமுமே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்தும் இந்துத்துவத்திற்கும் இந்து நாஜிகளுக்குமே சொந்தமானது. ஒருபோதும் அது கம்யூனிசமாக முடியாது என்பதை இந்த இந்துக் கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்; அல்லது நாம் அவர்களுக்கு அதைப் புரியவைக்க வேண்டும்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

Loading

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

Loading

இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன?

Loading

1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.
2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.
3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.

இந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன?

இந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது?

இதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார்? எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் – 2

Loading

மனிதனுக்கு ஆரோக்கியம் அளப்பரிய செல்வமாகும். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமானவனாக ஒருவன் ஒரு நாளை அடைவதைவிட பெரும் பேறு எதுவும் இல்லை. எந்தவொன்றும் நம்மை விட்டுச் செல்லும்போதுதான் அதன் அவசியத்தை நன்குணர்கிறோம். மனிதன் இழப்பின்போதுதான் இருப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்கிறான். தினமும் நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் கற்றுத்தரும் பின்வரும் பிரார்த்தனையை சற்று கவனமுடன் வாசித்துப் பாருங்கள். இந்த பிரார்த்தனையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஆஃபியா’ என்ற வார்த்தை முழுமையான ஆரோக்கியத்தைக் குறிக்கும். ‘அல்அஃப்வு’ நம்முடைய பாவங்களை அவன் கண்டுகொள்ளாமல் மன்னித்து விடுவதைக் குறிக்கும். முதலில் அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு பின்னர் ஆரோக்கியத்தைக் கேட்கிறோம். இரண்டையும் ஒருசேர கேட்க வலியுறுத்தப்பட்டிருப்பதற்கான சூட்சுமம் இரண்டிற்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதையே காட்டுகிறது:

மேலும் படிக்க
Uncategorized 

தசவ்வுஃப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

Loading

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போல இஸ்லாத்தின் நிழலில் உருவாகியதே தசவ்வுஃப் கலை. அது பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சிலர் தசவ்வுஃப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதையே ஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க தத்துவம், பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு கலையாக இதைக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தசவ்வுஃப் தவறாகப் புரியப்படுவதற்கும், அறிமுகப்படுத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்த அம்சங்கள் பற்றி ஆராய்வது ஒரு நீண்ட விளக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். சுருங்கக்கூறின், தசவ்வுஃப் அல்லது சூஃபி என்ற பதம் சிலபோது ‘Mysticism’ என்ற பதப் பிரயோகத்தோடு இணைத்துப் பேசப்படுதல், தசவ்வுஃபின் பெயரால் பிரபலப்படுத்தப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான கருத்துகள், சூஃபி தரீக்காக்களின் சில செயல்பாடுகள் போன்றவை தசவ்வுஃப் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு…

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

ஃபிரான்ஸ் ஃபனானும் இஸ்லாமும்

Loading

அல்ஜீரியாவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையிலான வீரஞ்செறிந்த காலனித்துவ எதிர்ப்புப் போராட்ட மரபுதான் ஃபனான் குறிப்பிடும் அந்தத் “தன்னெழுச்சி”. பத்தொன்பதாம் நூற்றாண்டு நெடுகிலும், ஏன் 1940-50கள்வரை கூட உயிர்ப்போடு இருந்த ஓர் போராட்டம் அது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)

Loading

இந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்?

Loading

உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?

மேலும் படிக்க