sufi bakli tomb நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ரகசியங்களின் திரைநீக்கம்: ஒரு ஸூஃபியின் டைரி (நூல் விமர்சனம்)

Loading

ரகசியங்களின் திரைநீக்கம் (கஸ்ஃபுல் அஸ்றார்) என்ற இந்த நூல் நாட்குறிப்பு வகைமையைச் சார்ந்தது. உலகில் நாட்குறிப்பு வகையிலான இலக்கியங்கள் புதிதல்ல. சீனர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்றாட அரச நிகழ்வுகளையும் அலுவல்களையும் குறித்து வைத்ததன் மூலமாகத் தங்களது வரலாற்றைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பார் க.ப.அறவாணன் (பார்க்க: தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?).

ரோமப் பேரரசனான மார்கஸ் ஆண்டோனியஸ் அரேலியஸ் எழுதிய ’தியானங்கள்’ (Meditations) நூலும் நாட்குறிப்பு வகைமைச் சார்ந்த தத்துவார்த்த நூலே ஆகும். தனிமனித ஒழுக்கம், அறவிழுமியங்கள், தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு, இயற்கையின் இயல்புகள் போன்ற விஷயங்களின் மீது அப்புத்தகம் புத்தொளிப் பாய்ச்சுவதால் ஸ்தோயிக் மரபினர் என்றில்லாமல் அனைவரும் வாசிக்கக்கூடிய பொது பனுவலாக அது திகழ்கிறது.

’தியானங்கள்’ மனித வாழ்விற்கான நெறிமுறைகளை முதன்மையாகப் பேசுகின்றதென்றால் ’ரகசியங்களின் திரைநீக்கம்’ பரம்பொருளுக்கும் படைப்பினத்திற்குமான உறவை, காதலை, பக்திப் பரவசத்தைப் பேசுகிறது. ரூஸ்பிஹானின் நூல் முதன்மையாக இறைக் காதலையும் ஒன்றிணைவையும் பேசுவதால் இஸ்லாமிய மெய்யியல் நூல் என்ற தளத்தையும் தாண்டி அனைத்து மரபைச் சேர்ந்த ஆன்மிகச் சாதகர்களுக்குமான பொது நூலாகவுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிந்தையில் ஆயிரம் வினாக்கள் – ரமீஸ் பிலாலி

Loading

ஸூஃபி மகான்களை இஸ்லாம்-நீக்கம் செய்து காட்டுவது என்பது இஸ்லாமோ ஃபோபியாவைப் பரப்புவதன் ஓர் அங்கமாக இவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஸூஃபிகளின் ஞானச் செல்வங்களை முஸ்லிம்களே மறுதலிக்கும்படிச் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. அதே சமயம், ஸூஃபிகள் எல்லாம் இஸ்லாத்தின் கட்டுப்பாடான சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்னும் பொய்ப் பிம்பத்தையும் கட்டமைத்துவிட முடிகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு அல்லது மேற்பட்ட மாங்காய்கள் விழுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

Loading

இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க
Uncategorized 

தசவ்வுஃப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

Loading

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போல இஸ்லாத்தின் நிழலில் உருவாகியதே தசவ்வுஃப் கலை. அது பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சிலர் தசவ்வுஃப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதையே ஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க தத்துவம், பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு கலையாக இதைக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தசவ்வுஃப் தவறாகப் புரியப்படுவதற்கும், அறிமுகப்படுத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்த அம்சங்கள் பற்றி ஆராய்வது ஒரு நீண்ட விளக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். சுருங்கக்கூறின், தசவ்வுஃப் அல்லது சூஃபி என்ற பதம் சிலபோது ‘Mysticism’ என்ற பதப் பிரயோகத்தோடு இணைத்துப் பேசப்படுதல், தசவ்வுஃபின் பெயரால் பிரபலப்படுத்தப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான கருத்துகள், சூஃபி தரீக்காக்களின் சில செயல்பாடுகள் போன்றவை தசவ்வுஃப் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு…

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சூஃபியிசம் என்றால் என்ன?

Loading

சூஃபிகள் எதை நம்புகின்றனர்? எதை அடைய முயலுகின்றனர்? என்ன செய்கின்றனர்? இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்

Loading

முஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.

மேலும் படிக்க