குறும்பதிவுகள் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரின் கண்டிக்கத்தக்கப் பேச்சு!

Loading

தலித்களுக்கு எதற்காக ஒரு அரசியல் கட்சி? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் பாமக போன்ற சாதியக் கட்சிகளே பலனடைகின்றன. எனவே அது ஒரு ‘மைய நீரோட்ட’ கட்சியின் தலைமையை ஏற்று அதனுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நிலவுகிற அரசியல் சூழலில் இப்படியெல்லாம் ஒடுக்கப்படும் தரப்பிடம் ஒருவர் அபத்தமாக அட்வைஸ் செய்தால் அவற்றை நாம் ஏற்போமா?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விமர்சனமும் பாராட்டும் சாதாரணமான விசயங்களா?

Loading

விமர்சனம் செய்வதும் பாராட்டுவதும் சாதாரணமான விசயங்கள் அல்ல. விமர்சனம் ஒரு மனிதனின் தவறுகளை அடையாளம் காட்டுகிறது. அவனைப் பண்படுத்துகிறது. அதன் மூலம் அவன் செம்மையாக்கப்படுகிறான். பாராட்டு அவனை ஊக்கப்படுத்துகிறது. அவனது பாதையில் கிடக்கும் தடைகளைத் தாண்டும் உத்வேகத்தை அவனுக்கு அளிக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

லௌகீகமும் ஆன்மீகமும்

Loading

எந்தவொன்றும் அளவுக்கு மீறி புனிதப்படுத்தப்படும்போது அது சிக்கல்மிகுந்ததாகி விடுகின்றது. தேவையற்ற புனிதங்கள் உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை தனிமனிதனின் மீது சமூகத்தின் மீது பெரும் சுமைகளாக மாறி நிற்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

விவாதம் – ஒரு சிறிய விளக்கம்

Loading

அறிஞர்கள் விவாதம் செய்ய விரும்புவதில்லை. அரைகுறைகளுக்கு விவாதம் பெரும் தீனி. அறிவிலிகளுக்கு அது ஒரு போர். விவாத அறைகூவல் விடுப்போரை புறக்கணித்து விடுவதே சிறந்தது. அதுதான் அதனை தகர்ப்பதற்கான சிறந்த வழிமுறையும்கூட. அதுவும் ஆன்மீக பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் விவாதத்தின் பக்கம்கூட செல்லாமல் இருப்பதே மிகச் சிறந்தது. அதுதான் பேணுதலான வழிமுறையும்கூட.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

ஒரு சிறிய பிரார்த்தனை

Loading

மனிதர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி ஒருவன் பாவங்களில் மூழ்கியிருப்பான் எனில் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை தன் திறமையின் விளைச்சலாகக் கருதிக்கொண்டிருப்பான் எனில் அவன் தனக்கான துன்பங்களை தானே தேடிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பலவீனர்கள் அல்ல உதவியாளர்கள்

Loading

பெண் குழந்தை பொன்னையும் கொண்டு வரும் என்று நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சொல்லும் நம் வாழ்பனுபவம் கற்றுத்தந்த பாடங்களில் ஒன்றுதானே. எல்லாம் தன் முயற்சியின், தன் திறமையின், தன் உழைப்பின் விளைவுதான் என்ற எண்ணம் மிக விரைவில் ஒருவனை நிராசையில் ஆழ்த்திவிடலாம். கர்வம் தனக்கு எதிரான நிராசையையும் கொண்டு வரும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காலனியத்தின் உண்மை முகம்

Loading

“செவ்விந்தியர்கள் மத்தியில் ‘தனியுடைமை’ எனும் கருத்தாக்கமே இல்லை. கூட்டாக உற்பத்தியில் ஈடுபட்டு, தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதால் ‘சந்தை’ என்ற ஒன்றும் அவர்கள் மத்தியில் இல்லை. எனவே அவர்களை மனிதர்கள் என்று ஏற்க முடியாது. மிருகங்களைப் பிடித்து, பழக்கி, தமது வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோல், செவ்விந்தியர்களையும் அடிமையாக்கி, பழக்கி, கட்டாய உழைப்பில் பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் சரியானதே.”

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

மால்கம் எக்ஸ்: கண்டெடுக்கப்பட்ட புதிய பக்கங்கள்

Loading

ஆனால், சமீபத்தில் சில கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. தற்போதைய தன்வரலாற்று நூலில் இடம்பெறாத பலவும் அதில் உள்ளன. நூலின் கட்டமைப்பையுமே கூட மால்கம் எக்ஸ் முற்றிலும் வேறுவிதமாகத் திட்டமிருந்தது இவற்றின் வழி தெரியவந்துள்ளது. தன் வாழ்க்கைப் பரிணாமத்தை வெறும் மூன்று அத்தியாயங்களில் சுருக்கிக் கொண்டு, எஞ்சிய அத்தியாயங்களில் கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றை உரை (speech) வடிவிலான அத்தியாயங்களாக அமைக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார் மால்கம்.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

“பௌத்தத்திற்கு மாறுவதில் அர்த்தமில்லை” – அம்பேத்கர்

Loading

“(தலித்துகள்) பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோர் (தலித்துகள்மீது) கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்.”

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

செக்குலர் இந்தியாவில் முஸ்லிம்கள்

Loading

தனிக்கட்சியாக அதிகாரம் செலுத்துவதை விட்டும் காங்கிரஸ் சரிந்ததிலிருந்து, இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியலமைப்பு வழியாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தால், இந்தியக் கூட்டணி ஆட்சிச் சூழலில் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை ஆகியிருக்கும். இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தேர்தல்களில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தக் கூடியளவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொகுதிகளெல்லாம் பெரும்பாலும் பிற சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்சொன்ன வகைகளில், இந்திய மதச்சார்பின்மை என்பது வேறொரு பெயரிலான இந்து நம்பிக்கைவாதம் (confessionalism) தான்.

மேலும் படிக்க