குறும்பதிவுகள் 

போதிப்பவனும் போதிக்கப்படுபவனும்

Loading

அறம் போதிப்பவர்களின், மார்க்கம் சொல்பவர்களின் தவறுகள் மட்டும் ஏன் இந்த அளவு பூதாகரமானவையாகப் பார்க்கப்படுகின்றன? ஆம், அறம்போதிப்பவர்களை அம்பலப்படுத்தி பார்ப்பதில் மனிதர்களுக்கு ஒரு குரூரமான ஆனந்தம் இருக்கிறது. அதனால்தான் மற்றவர்களைவிட அவர்களின் தவறுகள் பூதாகரமானவையாக சித்தரிக்கப்படுகின்றன. தொடர்ந்து அவை குறித்து பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இன்னொரு அம்சமும் இருக்கிறது. அறம்போதிக்கும் அந்த மனிதர்களின் கீழ்மைகளைக் கொண்டு தங்களின் கீழ்மைகளை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். அவர்களுக்கு அதில் ஒருவித ஆறுதலும் மகிழச்சியும் உள்ளது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

நோன்பும் மனக்கட்டுப்பாடும்

Loading

நோன்பின் மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகலாம் என்று இறைவன் கூறுகிறான். தக்வா என்றால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதும் தடுக்கப்பட்ட வழிகளைவிட்டு தவிர்ந்திருப்பதும் ஆகும். தக்வா என்பது இயல்பு நிலை. இந்த உலகில் ஒரு மனிதன் இங்கும் அங்கும் தடுமாறித் திரியாமல், ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிடாமல் இயல்பு நிலையில் நீடித்திருந்தாலே போதுமானது. உண்மையில் அதுதான் வெற்றி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஆண்மை தவறேல்!

Loading

ஆண்மை என்பதை ஏதோ நம் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுகொண்டு மருக வேண்டிய ஓர் ஆதி பாவம் போல் சித்தரிக்கிறது இன்றைய கலாச்சாரம். ஆனால், நாம் ஒழுங்குபடுத்தி, வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கொடை அது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

உலகை ஆளும் புதிய மதம்!

Loading

Pew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின் நிலையென்ன, 77 சதவீதம் இருப்பவர்களுள் எத்தனை பேர் இஸ்லாமிய உலக நோக்குடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறார்கள்? சில தலைமுறைகள் கடந்த பின்னர் நிலைமை என்னவாகும் என்பன விடை காண வேண்டிய வினாக்களாய் நம்மிடையே உள்ளன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மேற்கத்திய அழகியலும் இஸ்லாமிய அழகியலும்: சிறு ஒப்பீடு

Loading

மேற்கும் கிழக்கும் அழகு குறித்த தமது கண்ணோட்டத்தில் ஒன்றுக்கொன்று வேறுபடக்கூடியவை. மேற்குலகைப் பொறுத்தமட்டில் அழகு என்பது வெளிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாக முன்வைக்கப்பட்டது. அதேசமயம், கிழக்குலகோ அழகை மறைத்தும் பாதுகாத்தும் வந்திருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பின்நவீனத்துவத்தை நாம் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

அவர்கள் விளங்காத மொழியிலும் கவர்ச்சிகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்துவதிலும் வல்லவர்களாக இருப்பினும் உண்மையான மாற்றுகளை முன்வைப்பதில்லை. ஆம், பலவற்றைச் சிதறடிக்கிறார்கள்; ஆனால் ஆக்கப்பூர்வமாக எதனையும் கட்டியெழுப்பவில்லை. எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு இறுதியில் அவர்களின் நம்பிக்கையை திறந்த சந்தையில் வைப்பதோடு Anglo-saxon தனிமனிதவாத, இயற்கைவாத, தாராளவாதத்தில் போய் விழுந்துவிடுகிறார்கள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தற்கொலை

Loading

இறைநம்பிக்கையாளர்கள் இறைவன் மீது எந்தச் சமயத்திலும் நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். இந்த நம்பிக்கை மிக எளிய நம்பிக்கைததான் என்றாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் வலுவானது. இதுபோன்ற நம்பிக்கைகளே வாழ்க்கையே அழகுபடுத்தும். அதனை எளிதாகக் கடப்பதற்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

காஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா?

Loading

காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பது மக்கள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலின் தொடக்கமே ஒழிய, வெறும் நிலஅபகரிப்பு அல்ல. நிலத்தை அபகரிப்பது அந்த மக்களைத் துன்புறுத்துவதற்குத்தானே தவிர, நிலத்தை அபகரிப்பதற்காக அந்த மக்கள் துன்புறுத்தப்படவில்லை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்

Loading

நாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஷ்மீர் பிரச்சினை பற்றி அருந்ததி ராய்

Loading

நாமொரு தேசிய அரசின் கீழ் வாழ்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், அவ்வரசு நம் பெயரால் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை, அவை அறம் சார்ந்தவையா, அறம் பிறழ்ந்தவையா? அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் தகுமா, தகாதா? என்று நாம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க