கட்டுரைகள் 

தன்னிறைவு

Loading

நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யார் மாதிரியும் ஆக வேண்டாம். இங்கு ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்புதான். ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. உங்களின் திறமைகளை, செல்வங்களை, நேரங்களை முடிந்த மட்டும் நல்வழியில் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். இறைவன் உங்களுக்கு எந்தப் பாதையை இலகுபடுத்தித் தருகிறானோ அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. எந்தப் பணியில் நீங்கள் மனதிருப்தி அடைகிறீர்களோ அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 6

Loading

ஒரு நற்செயல் செய்யும்போது மனித மனம் உணரும் திருப்தியே அதற்குக் கூலியாக இருப்பதற்குப் போதுமானது. சத்தியத்தைப் பின்பற்றுபவன் இவ்வுலகிலேயே சுவனத்தைக் காண்கிறான். அவனது மனம் உணரும் நிம்மதிதான் அந்த சுவனம். பாவமான, அநீதியான செயல்களில் ஈடுபடும்போது கிடைக்கும் கணநேர அற்ப இன்பங்கள் அவற்றுக்குப் பிறகு வரக்கூடிய குற்றவுணர்ச்சியால் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து மனிதன் செய்யக்கூடிய பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்ச்சி அவன் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டேயிருக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 5

Loading

நம் உலகம் விசாலமாக விசாலமாக நம் மனதும் விசாலாமாகிக் கொண்டே செல்லும். அது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து பெரிதும் தாக்கமடையக்கூடியது. அறிதல்கள் நம் மனதை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றன. அந்த அறிதல்களை நாம் பரந்துவிரிந்த இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் பெற முடியும். அது மௌன மொழியில் நமக்கு உணர்த்தும் அறிதல்கள் எண்ணிக்கையற்றவை. அவை மனதின் வெளியை விசாலமாக்கக்கூடியவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -4

Loading

மனித மனதிற்கு கடிவாளங்கள் அவசியம். அது ஒருபுறம் கடிவாளங்களை வெறுத்தாலும் இன்னொரு புறம் அவற்றை விரும்பவும் செய்கிறது. ஏனெனில் அது தன்னை நினைத்து பயப்படுகிறது. தன் ஆசைகள் தன்னை படுகுழியில் தள்ளிவிடாமலிருக்க வேண்டும் என்று அது விரும்புகிறது. அதனால்தான் அது சில சமயங்களில் தன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களைக்கூட விரும்புகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே -3

Loading

எது மனிதனை அதிகம் அச்சுறுத்துகிறதோ, எதை அவன் அதிகம் விரும்புகிறானோ, எதை அவன் அதிகம் வெறுக்கிறானோ அவற்றைப் பற்றியெல்லாம் அவன் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறான். பேசிப் பேசி விருப்பையும் வெறுப்பையும் தீர்த்துக் கொள்கிறான்; அச்சத்திலிருந்து விடுபட முனைகிறான். பேச்சு ஒன்றுதானே மிக இலகுவான வழி.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 2

Loading

ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான, தனக்குப் பிரியமுள்ள இன்னொரு ஆன்மாவிடம் மொழியின்றி பேசுகிறது. அது என்ன சொல்ல, என்ன செய்ய விரும்புகிறது என்பதை சொல்லாமலேயே அறிந்துகொள்கிறது. நாம் பேசும் மொழி நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். பல சமயங்களில் அது உள்ளத்திற்கு மாற்றமானவற்றையும் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தின் மொழி அப்படியல்ல. அது உள்ளதை உள்ளபடியே உணர்த்திவிடும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

Loading

எல்லாம் ஒரு கனவுபோல நிகழ்ந்துவிடுகின்றது. கனவுக்கும் நிஜத்திற்கும் மத்தியிலுள்ள மெல்லிய திரை சில சமயம் அகற்றப்பட்டுவிடுகிறது. நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தர்க்கத்திற்கு அப்பால்

Loading

கனவுகள் எப்படி தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையோ அப்படித்தான் நம் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளத்தான் செய்வார்கள். பெரும்பாலோர் அவற்றை கவனிப்பதில்லை அல்லது அவற்றைக் குறித்து சிந்திப்பதில்லை. மிகச் சிலரே அவற்றிற்குப் பின்னாலிருக்கும் மறைகரம் குறித்து சிந்திக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

குற்றவுணர்வு என்ன செய்கிறது?

Loading

மனிதனின் அகத்திற்கும் புறத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அகத்தில் உள்ளதே புறத்திலும் வெளிப்படும். நாவு சொல்லும் பொய்யையும் புறத்தோற்றம் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரது முகத்தைப் பார்த்தே அவர் உண்மையாளரா, பொய்யரா என்பதை நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள முடியும். பல சமயங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தே நாம் அவரைக் குறித்து ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆன்மாவின் வெளிச்சமும் இருளும் அவரது முகத்திலும் பிரதிபலிக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தனிமையும் வெறுமையும்

Loading

இறைநினைவு இல்லாத உள்ளங்களில் ஷைத்தானின் ஆதிக்கமே நிலைத்திருக்கும். அவை காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசிகள்போல எந்தவொன்றாலும் மிக எளிதாக இழுத்துச் செல்லப்பட்டுவிடும். அவை சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை இழந்த சூழலின் கைதிகள். சுதந்திரமான மனிதன் என்பவன் தன் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளவன்; இச்சைகளால் வழிநடத்தப்படாதவன்; எந்தவொன்றுக்கும் அடிமையாதவன்.

மேலும் படிக்க