நூல் அறிமுகம் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

‘ஃபெமோ நேஷனலிசம்’ என்றால் என்ன? – சாரா ஃபாரிஸ் நேர்காணல்

Loading

‘பெண் உரிமைகளின் பெயரால்: ஃபெமோ நேஷனலிசத்தின் எழுச்சி’ எனும் தலைப்பிலான ஆர்வமூட்டும் புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சாரா ஃபாரிஸ். அதில் வலதுசாரி தேசியவாதிகளும் நவதாராளவாதிகளும் சில பெண்ணியவாதிகளும் பாலினச் சமத்துவம் கோரும் முகமையைச் சேர்ந்தோரும் முஸ்லிம் ஆண்களைப் பூதாகரப்படுத்தும் நோக்கிலும், தங்கள் சொந்த அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காகவும் பெண் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதை ஆராய்கிறார். இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையே முரண்படுபவையாகத் தெரிந்தாலும், ஒரு புள்ளியில் இவை சந்தித்துக்கொள்வதில் முக்கியமானதொரு அரசியல்-பொருளாதாரப் பரிமாணம் இருப்பதாக அவர் வாதிடுகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்

Loading

‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கீழைத்தேயவாதம்: இஸ்லாத்தின் மீதான கருத்தியல் போர்

Loading

தூதுத்துவத்தில் உதயமான இஸ்லாமிய அரசியலின் வரலாற்றோட்டம் 1924ல் தற்காலிகமாக அஸ்தமித்தது. 18ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இந்த சரிவினையே மேற்குலக முதலைகள் தமது கோரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக மாற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தையும் காலனித்துவ அடக்குமுறையையும் படிப்படியாக முஸ்லிம் நாடுகள் மீது திணித்தனர். அதனூடாகவே அல்ஜீரியா, மொரோக்கோ, துனீஷியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பிரான்ஸிடமும் இந்தோனேஷியா ஒல்லாந்தரிடமும் எகிப்து பிரிட்டிஷிடமும் துருக்கி ரஷ்யாவிடமும் லிபியா இத்தாலியிடமும் இரையாகின.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்

Loading

முஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.

மேலும் படிக்க