கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலத்தின் விடியலும் வரலாற்றின் பாடமும்: முஹர்ரம் தரும் புரட்சிகர சிந்தனைகள்

Loading

ஹிஜ்ரத் என்பது வெறும் இடம்பெயர்வோ அல்லது ஒரு இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உலகை மாற்றி அமைக்கும் பெரும் சக்தியாக மாறுவதற்கான மாபெரும் பாய்ச்சலாக அது அமைந்தது.
அதிகாரத்தின் நிழலில் நின்று அக்கிரமத்தையும் அநீதியையும் மேற்கொண்டவன் இறைநம்பிக்கையின் வலிமையோடு அழிக்கப்பட்டது முஹர்ரம் மாதத்தில்தான்.
சர்வாதிகாரத்தை தீர்க்கமாக எதிர்கொண்ட கர்பலா நிகழ்ந்ததும் இதே மாதத்தில்தான்.
கண்ணீர் சிந்துவதற்காக அல்ல, மாறாக, வரலாற்றை நெறிமுறை சார்ந்த வீரத்தோடு எதிர்கொள்ளும் பாடங்களையே ஹிஜ்ரத்யும் முஹர்ரமும் நமக்கு கற்றுத் தருகின்றன என்பதை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)

Loading

ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.

மேலும் படிக்க