தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)

ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு

இஸ்லாத்தின் பெயரால் கொலைபாதகங்களை நிகழ்த்திவரும் ஒரு சமகால கிரிமினல் கும்பலை (ISIS) ஆதரிப்பதென இவர்கள் எடுத்திருக்கும் அநீதமான நிலைப்பாடு, இவர்களை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது சினமும் பரிதாபமும் கலந்தவொரு உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5

‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

அண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்

இறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.

மேலும் படிக்க