தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1

சொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறையச்சமுடையோரின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.

மேலும் படிக்க