தொடர்கள் மொழிபெயர்ப்பு 

பாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

திருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார்? பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார்? இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே?! நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.

மேலும் படிக்க