மகாஸிதியச் சிந்தனை: ஓர் ஆய்வு முறைமை
பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் ஆய்வுமுயற்சிகளினூடான புரிதல்
![]()
சமகால உலகில் இஸ்லாமிய புலமைத்துவ வட்டாரத்தில் அதிக கவனயீர்ப்பை பெற்று வரும் ‘மகாஸித்’ பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது. வரலாறு நெடுகிலும் உஸூலுல் ஃபிக்ஹ் மற்றும் ஃபிக்ஹ் கலையோடு மட்டுப்படுத்தி நோக்கப்பட்ட மகாஸிதை, ஷரீஆவின் எல்லாத் துறைகளோடும் தொடர்புபடுத்தி நோக்கும் நிலையை சமகால ஆய்வுகளில் காண முடிகின்றது. இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் தோன்றிய ஒரு கலையாக நோக்குவதற்கு அப்பால், மகாஸிதை ஓர் ஆய்வு முறைமையாக விளக்கும் சமகால மகாஸிதிய்ய ஆய்வாளர் பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய்கிறது.
மேலும் படிக்க