daniel haqiqatjou liberalism tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (3)

Loading

எல்லாச் சட்டங்களுக்கும் பின்புலத்தில் ஒரு சிந்தனைச் சட்டகம் இருக்கிறது. அனைவருக்கும் பொதுவான, நடுநிலையான சிந்தனைச் சட்டகம் சாத்தியமற்றது. மதச்சார்பற்ற சட்டங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை என்று வாதிடப்படலாம். ஆனால், அவற்றுக்கு நவீன சிந்தனைச் சட்டகம் ஆதாரமாக விளங்குகிறது.

அந்தச் சட்டகத்தின் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் வழியாக நவீனச் சிந்தனையும், அதற்குத் தோதுவான வாழ்வொழுங்கும் குடிமக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவற்றை எவரேனும் எதிர்த்தால் அவர் சிறைவைக்கப்படவோ அபராதம் விதிக்கப்படவோ நேரிடும் அல்லவா? பிறகு எப்படி அவற்றுக்கு எந்தச் சார்பும் இல்லை என்றும், இன்னொருவர் நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கூற முடியும்?

மேலும் படிக்க
daniel haqiqatjou liberalism tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (2)

Loading

தீங்குக் கொள்கை அறம் சார்ந்த வழிகாட்டலை வழங்குவதாக தாராளவாதம் வாதிடுகிறது. பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எதையும் நாம் செய்யலாம் என்பதே தீங்குக் கொள்கையின் சாரம். “ஒரு சிவில் சமூகத்தின் ஏதேனுமோர் அங்கத்தவர் மீது அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக இருந்தால் அது பிறருக்கு அவரால் தீங்கு ஏற்படாமல் தடுப்பதற்காகவே இருக்க வேண்டும்” என்பார் நவீனச் சிந்தனையாளரான ஜான் ஸ்டூவர்ட் மில் (On Liberty, 1859). இதையொத்த கருத்தையே ஜான் ழாக், இம்மானுவேல் கான்ட் உள்ளிட்டோரும் முன்வைத்தார்கள்.

அறம்சார் விதிமுறைகள் தீங்கு விளைவிப்பதோடு மட்டும் தொடர்புடையது அல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளன. எனவே, சரி – தவறுகளை தீங்குக் கொள்கையைக் கொண்டு மட்டுமே வரையறுத்துவிட முடியாது. எவையெல்லாம் தீங்கு விளைவிப்பவை என்பதேகூட ஒவ்வொருவரின் சிந்தனைச் சட்டகத்தைப் பொருத்து மாறுபடக்கூடியதுதான்.

மேலும் படிக்க
daniel haqiqatjou liberalism tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (1)

Loading

தாராளவாதம் குறித்து சற்று விரிவாக இந்தப் பாடநெறியில் பார்க்கவிருக்கிறோம். இந்தக் கருப்பொருளில் பாடமெடுப்பதற்கு நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். ஏனெனில், இது எனக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு. ஒரு கருத்தியலாக, தத்துவமாக தாராளவாதத்தின் அடிப்படையான எண்ணக்கருக்களை நாம் இங்கு அலசவுள்ளோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (4)

Loading

மனித உள்ளுணர்வு பல்வேறு விஷயங்களில் பெரும்பாலான மக்கள் பொது ஏற்பு கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணம் மனிதன் இயல்பாகக் கொண்டிருக்கும் உள்ளுணர்வுதான். அது தர்க்கத்துக்கும் அனுபவவாதத்துக்கும்கூட ஓர் அடிப்படையாக விளங்குகிறது. முரண்படா கொள்கை என்பது தர்க்கத்தின் ஆதாரமான கருத்தாக்கமாகும். உதாரணத்துக்கு, என் கையிலுள்ள புத்தகத்தின் அட்டை கறுப்பு நிறம் என்றும், கறுப்பு நிறமல்ல என்றும் சொன்னால், அதில் முரண்பாடு உள்ளது. இரண்டுமே சரியான பதிலாக இருக்க முடியாது. ஆக, அதில் தர்க்கப் பிழை இருக்கிறது. சரி, உங்களிடம் ஒருவர் இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது, இரண்டுமே சரிதானே என்று கேட்டால், எப்படி அவருக்கு யதார்த்தத்தை விளக்குவீர்கள். அவரை மனப்பிறழ்வு கொண்டவர் என்றல்லவா நினைப்பீர்கள்? காரணம், இயல்பாக மனிதர்கள் சிந்திக்கும் விதத்தில் அவர் சிந்திக்கவில்லை என்பதால். தர்க்கத்தைப் போன்றே அனுபவவாதத்துக்குள்ளும் உள்ளுணர்வு தொழிற்படுகிறது. குழந்தைகளுக்கு மொழியை எப்படி கற்பிப்பீர்கள்? ஒரு…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (3)

Loading

எது அறம், எது அறமல்ல என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதில் இஸ்லாமும் நவீனத்துவமும் முரண்படுகின்றன. சரி – தவறைப் பிரித்தறிய இரண்டுமே வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. சமூகம் முன்னேறும்போது அற மதிப்பீடுகள் புதிது புதிதாகக் கண்டடையப்படுவதாகவும், மதங்கள் தேங்கி நிற்பதாகவும் முற்போக்குவாதிகள் வாதிடுகின்றனர். நாம் முன்சென்ற தலைமுறையினரைவிட அறிவில் வளர்ச்சியடைந்துள்ளதால் அவர்கள் சரியென்று கருதிய பல விஷயங்கள் இன்று தவறாகியுள்ளன என்கிறார்கள்.

பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எதை வேண்டுமானாலும் நீ செய்யலாம் எனும் கருத்தாக்கம் (No Harm Principle) இவர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் உடலுறவு வைத்துக்கொள்வது தவறல்ல எனும் நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள். அதைத் தவறென்று சொல்வது குற்றப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (2)

Loading

இஸ்லாமிய அறிதல்முறையில் மரபுக்கு மையமான இடமுண்டு. அதேவேளை, பகுத்தறிவையும் அனுபவவாதத்தையும் புறக்கணிப்பது இஸ்லாமிய நிலைப்பாடல்ல. நம் அறிதல்முறையின் பகுதிகள்தாம் அவை. இறைவனும் திருமறையில் தொடர்ச்சியாக நம்மை சிந்திக்கத் தூண்டுகிறான் அல்லவா?

இஸ்லாம் மற்றும் நவீனத்துவ சிந்தனைச் சட்டகங்களுக்கு மத்தியிலான வேறுபாடு எந்தப் புள்ளியில் தோன்றுகிறது என்றால், ஃபித்றா, உள்ளுணர்வு, மரபு என்பன உங்கள் சிந்தனைக்கு இடையூறாக இருப்பதாய் நவீனத்துவம் வாதிடுகிறது. அத்தோடு, உங்கள் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே அறிவின் மூலங்களாக முன்வைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (1)

Loading

இஸ்லாம், நவீனத்துவம் ஆகியவற்றின் சில பகுதிகள் பரஸ்பரம் ஒத்துப்போகக்கூடும். ஆனால், இரண்டையும் நாம் குழப்பிக்கொண்டால் சிக்கல் உருப்பெறும். ஒரு சிந்தனைச் சட்டகம் உங்கள் சிந்தனையை, உணர்வை, அறிவுக்கும் நெறிமுறைக்குமான உங்களது உரைகல்லை, உலகம் குறித்த உங்களது புரிதலை, சுயம்சார் புரிதலை எல்லாம் தீர்மானிப்பதாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மில் பலருக்கு இஸ்லாம் குறித்து குழப்பங்களும் சந்தேகங்களும் எழக் காரணமும் சிந்தனைச் சட்டகம் சார்ந்ததே. இதை சரியாக இனங்காணாததன் விளைவாகவே நவீனத்துவ முஸ்லிம்கள் தடம் புரள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தின் விளிம்பில் நிற்பவர்கள். அதனால் சிலபோது நவீனத்துவ கருத்துநிலையின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடுவார்கள்.

மேலும் படிக்க
இமாம் அல் கஸ்ஸாலி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இமாம் கஸ்ஸாலியும் குவாண்டம் கொள்கையும் (1)

Loading

தோற்றங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பொருட்கள் இறைவனின் விருப்பத்திற்கிணங்க செயலாற்றுகின்றனவா? மேலும், பொருட்கள் நிரந்தரமில்லாதவையா? அவற்றை இறைவன் தொடர்ச்சியாகப் படைப்பதால் மட்டுமே பொருட்கள் இருக்கின்றனவா? கஸ்ஸாலியின் கூற்றுப்படி, இவ்வனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், ஆம். தோற்றமளிக்கும் பொருட்கள் நிரந்தரத்தன்மை கொண்டவையல்ல. அப்பொருட்களின் சார்புநிலைகள் காரணங்களோடு தொடர்புடையவை. ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்குக் கொண்டு செல்பவையானாலும் அக்காரணங்கள் இறைவனுடைய பண்புகளின் விளைவாகும்! இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தொடர்ச்சியாகப் படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் படைப்பதை நிறுத்திவிட்டால் பொருட்கள் எதுவும் இருக்காது. எந்தப் பொருளும் இல்லாமலாகும்.

மேலும் படிக்க
இஸ்லாமிய கல்வி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்

Loading

முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிந்தையில் ஆயிரம் வினாக்கள் – ரமீஸ் பிலாலி

Loading

ஸூஃபி மகான்களை இஸ்லாம்-நீக்கம் செய்து காட்டுவது என்பது இஸ்லாமோ ஃபோபியாவைப் பரப்புவதன் ஓர் அங்கமாக இவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஸூஃபிகளின் ஞானச் செல்வங்களை முஸ்லிம்களே மறுதலிக்கும்படிச் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. அதே சமயம், ஸூஃபிகள் எல்லாம் இஸ்லாத்தின் கட்டுப்பாடான சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்னும் பொய்ப் பிம்பத்தையும் கட்டமைத்துவிட முடிகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு அல்லது மேற்பட்ட மாங்காய்கள் விழுகின்றன.

மேலும் படிக்க