தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

இஸ்லாத்திற்கென்று தனித்த, அனைத்தையும் தழுவிய ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கின்றது. இஸ்லாம் முன்வைக்கும் இறைக் கோட்பாடு தொடங்கி, அது கொண்டுவர விரும்பும் சமூக மாற்றம் வரை அனைத்தும் அதிலிருந்தே பிறக்கின்றன. அதனை இரத்தின சுருக்கமாக, திட்டவட்டமான முறையில் வரைவிலக்கணம் செய்யும் முயற்சியில் சையித் குதுப் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி) என்பது புத்தகத்தின் தலைப்பு. இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக நிலைநிறுத்த உழைக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய சாராம்சமான விசயங்களை அதில் முன்வைத்துள்ளார். இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் என்பதென்ன என்று விளங்க முயலும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் நல்லதொரு அறிமுகப் பிரதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 3) – மரியம் ஜமீலா

Loading

“எவரேனும் இஸ்லாத்தை மீள்கட்டமைப்பு அல்லது மறுதிசையமைப்பு செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். இஸ்லாத்தின் எந்தெந்தப் பகுதிகள் உயிரற்று உள்ளன, அவை ஏன் அவ்வாறு உள்ளன, எந்த அடிப்படையில் அவற்றை மாற்றலாம், அதன் அதிமுக்கிய உயிருள்ள பகுதிகள் எவை, அவற்றை எந்நிலையில் அவர் தக்கவைத்துக் கொள்வார் போன்ற கேள்விகளுக்கு தெளிவான வாதங்களின் அடிப்படையில் பதிலளித்தால், அவரது முயற்சிகள் வரவேற்கப்படும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

Loading

சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

Loading

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க
காணொளிகள் 

செல்லாத நோட்டு சொல்லாத சேதி – ஜெ.ஜெயரஞ்சன்

Loading

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா

Loading

“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு?”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஆய்வுக் கட்டுரை: இஸ்லாமிய பார்வையில் அரசியல் பொருளாதாரம்

Loading

தனது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மீது உழைப்பாளி மட்டுமே சட்டபூர்வமாக உரிமை கோர முடியும். எனவே, யாரேனும் ஒருவர் மற்றவர்களை வேலைக்கமர்த்தி, அவர்களுக்குக் கூலியையும் கருவிகளையும் வழங்கி, அவர்களின் உழைப்பில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களை தனது உடமையாக்கிக் கொள்வதென்பது இஸ்லாத்தை பொறுத்தவரை நினைத்தும் பார்க்கவியலாத ஒன்று.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள் – வில்லவன்

Loading

இந்த நடுத்தர வர்க்கம்தான் இதுவரை நடந்த தாராளமய சுரண்டலுக்கு விளம்பர தூதுவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் இதுவரை நடந்த சூழல் சீர்கேடுகளுக்கும், கிராமப் பொருளாதார வீழ்ச்சிக்கும் மவுன சாட்சிகளாக இருந்தார்கள். வறிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களான மானிய வெட்டு, இலவச கல்வி மருத்துவ வசதிகள் ஒழிப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் ஒழிப்பு போன்றவைகளுக்கு இவர்களே போர்வீரர்களாக இருந்தார்கள். ஆனால் இனி இந்த வீரர்களுக்கான தேவை இல்லை, அவர்களுக்கு வீசப்படும் எலும்புத்துண்டுகள் இனி கார்ப்பரேட்டுக்களுக்கு அனாவசியம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மோடி அரசின் ‘செல்லாது’ அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

Loading

தமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே? ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்பவே பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

Loading

பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.

மேலும் படிக்க