கட்டுரைகள் 

இந்துத்துவமும் பொதுஎதிரி கண்ணோட்டமும்

Loading

மதத்தின் துணைகொண்டே பிராமணர்கள் இந்திய மக்களிடைய ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் தங்களின் மதத்தின் வழியாகவே தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். குலதெய்வ வழிபாட்டைத் தவிர மதம் குறித்து எந்தவொரு நிலையான கண்ணோட்டத்தையும் கொண்டிராதவர்களிடம் தங்களின் மதமே அனைவருக்கும் உரிய மதம் என்ற சிந்தனையை பரப்பியதில் அவர்கள் பெருமளவு வெற்றி கண்டார்கள் என்றே தெரிய வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மரணம் என்னும் எதார்த்தம்

Loading

மரணம் பற்றிய நினைவு வாழ்வின் மீதான பற்றைக் குறைக்கிறது. வாழ்வின் எதார்த்தத்தைப் புரிய வைக்கிறது. அதனைப் புரிந்துகொண்ட மனிதன் கிடைத்திருக்கும் குறுகிய வாழ்வை சரியான முறையில் வாழவே விரும்புவான். அதனால்தான் நபியவர்கள் தம் தோழர்களுக்கு மீண்டும் மீண்டும் மரணம் குறித்து நினைவூட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அதிகாரமும் அநியாயமும்

Loading

அதிகாரம் இடம்பெயரக்கூடியது. அது யாரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கியிருக்காது. இன்று ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் நாளை ஒடுக்கப்படுபவர்களாக மாறலாம். இன்று ஒடுக்கப்படுபவர்கள் நாளை ஆட்சியாளர்களாக மாறலாம். அதிகாரம் எப்படி பறிக்கப்படுகிறது? அது எப்படி கைமாறுகிறது? என்பதின் உண்மைநிலையை நாம் அறிய மாட்டோம். வெளிப்படையான காரணங்களை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அவைதாம் உண்மையான காரணிகளாக இருக்குமானால் ஒடுக்கப்படுபவர்கள் எப்போதும் ஒடுக்கப்படுபவர்களாக, ஆட்சியாளர்கள் எப்போதும் ஆட்சியாளர்களாகத்தான் இருப்பார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

உறவுப் பாலத்தின் அடித்தளம்

Loading

உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிலைபெறுகின்றன. அந்த நம்பிக்கையில் விழும் சிறு கீறல்கூட அடித்தளத்தை ஆட்டம்காணச் செய்துவிடும். நம்பிக்கைத் துரோகம் ஒட்டுமொத்தமாக கட்டடத்தையே தகர்த்துவிடும். உறவுகளின் வழியேதான் நாம் வாழ்க்கையை சலிப்பின்றி, வெறுமையின்றி, பயமின்றி பாதுகாப்புணர்வோடு கடந்து செல்ல முடியும். தனிமையுணர்வும் வெறுமையும் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிடக்கூடியவை. அவை நம் வாழ்வை அர்த்தமற்றதாக ஆக்கிவிடக்கூடியவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அநியாயம், அநியாயம்

Loading

நீதி என்பது இவ்வுலகில் செயல்படும் மாறா நியதிகளுள் ஒன்று. மனிதர்கள் நீதி வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அது தனக்கான இடத்தைப் பெற்றே தீரும். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு வடிவில் தனக்கான இடத்தை அடைந்தே தீரும். அநியாயக்காரர்கள் தற்காலிகமாக தப்பித்துவிட்டாலும் தங்களின் செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தண்டிக்கப்பட முடியாத உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டாலும் ஏதேனும் ஒரு வடிவில் தாங்கள் செய்த அநியாயங்களுக்கான விளைவுகளை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஆம் நான் எழுதுகிறேன்

Loading

இப்படியொரு காலம் கனிந்து வர வேண்டும் என்றும் மொழி என் வசப்பட வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். அபுல் ஹசன் நத்வீ, செய்யித் குதுப் ஆகியோரின் புத்தகங்களை படிக்கும்போதெல்லாம் இப்படியொரு மொழிவளத்தை என் மொழியில் நான் பெற வேண்டும் என்று என் மனம் துடியாய் துடிக்கும். ஆச்சரியமாக இருக்கிறது, அன்று நான் செய்த பிரார்த்தனையை இன்று நினைத்துப் பார்க்கிறேன். அது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவே உணர்கிறேன். என்னையும் அறியாமல் என்னிடமிருந்து எழுத்து பீறிடுகிறது. என்னை அதற்கு ஒப்புக் கொடுக்கிறேன் என்பதைத் தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை. இது நான் அதிகமாக எழுதிக் குவிக்கும் காலமாக இருக்கும் என நான் நம்புகிறேன். என் இறைவன் அதற்கு அருள்புரிய வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாத்திகம் என்னும் சீர்குலைவு

Loading

இறைவனை மறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவனை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. மனிதன் தன் இயல்பு நிலையில் நிலைத்திருத்தலே போதுமானது. மேலோட்டமான அறிவு இறைவனை மறுக்கத் தூண்டலாம். ஆனால் ஆழமான அறிவு நிச்சயம் மனிதனை இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பெண் என்பவள்…

Loading

பெண்ணியம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு. அதன் கண்ணோட்டத்தில் நின்று நாம் பெண்களைப் பார்த்தால் ஏமாந்துவிடுவோம். ஆண்களுக்கு எதிராக அது உருவாக்கி வைத்திருக்கும் சொல்லாடல்கள் போட்டி மனப்பான்மையை, காழ்ப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதன் கண்ணோட்டங்கள் பெரும்பாலும் பாசாங்கானவை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்?

Loading

1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஒரு ஜெர்மானியராகவோ, உலகக் குடிமகனாகவோ, மனித உரிமைப் போராளியாகவோ அல்ல.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

Loading

இரவில் வெளிப்படும் மனிதன் வேறு. பகலில் வெளிப்படும் மனிதன் வேறு. பகல் அவனை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு நிறுத்துகிறது. அவன் தவறு செய்ய அஞ்சுகிறான், வெட்கப்படுகிறான். இரவு அப்படியல்ல. அது அவனை மூடி மறைக்கிறது. இரவுக்குள் செல்லச் செல்ல அவனது மிருக உணர்ச்சி கூர்மையாகிக் கொண்டே செல்கிறது. அது அவனது அறிவை மழுங்கடிக்கும் எல்லை வரை செல்கிறது. இரவில் விரைவாகத் தூங்கும் மனிதர்கள் பாக்கியவான்கள். தூக்கம் பெரும் திரையாக உருவெடுத்து அவர்களைப் பாதுகாக்கும் கேடயமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க