கவிதைகள் 

திரை

Loading

சின்னஞ்சிறு பொய்களையெல்லாம்

சிறு பொய்கை ஒன்று வளர்த்தது

ஊதா வெள்ளை என்று இரவு பகலாய் பூத்து

அத்தனைக்கும் மேலால் திரையிட்டிருந்தது

சத்தியத்தின் நீர்வெளியில் அசாத்தியம்

தலைகீழ் விம்பமாய்த் தெரிகிறது

பழுப்பு நிறத்தில் மாறியிருந்த

முந்தைய வாக்குறுதி தோய்ந்த வெண்சட்டை

பெட்டியில் காலங்காலமாக மஞ்சள் கனவில் உறங்கியிருக்கிறது

ஒவ்வொரு அசத்தியமும்

தன்னையொத்த மற்றுமொரு அசத்தியத்தின்

சலசலப்புக்கு இரையாகிறது

ஒவ்வொன்றாய் குறைந்து குறைந்து

மெய்மையின் வேலியில்

கைகளைக் கிழித்து சொட்டும் குருதியை

பொய்கையில் கலந்து காலத்தின்

ரணமென நொந்துகொண்டது

சுழற்சியில் பலியாகிறது

பித்தம் தெளிந்த பின்

ஒற்றிக்கொள்ளும் வாய்மையின் வழித்தடம்

Related posts

Leave a Comment