கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கல்வி வளாகங்களில் நிகழும் இனப்படுகொலை!

Loading

கல்வி என்பது விடுதலைக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கற்பித்தார். ஆனால், இன்றைய இந்திய வளாகங்கள் தலித் மாணவர்களை அவர்களின் சாதி அடையாளத்திற்குள்ளேயே முடக்கி வைக்க முயற்சிக்கின்றன. சட்டங்களை விடவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனங்களிலுள்ள சாதி உணர்வு மாறாதவரை, கல்வி வளாக மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். சாதி மற்றும் மத பாகுபாட்டை எதிர்கொள்ள தலித், முஸ்லிம் மாணவர்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் ‘தேச துரோகிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். கல்வி வளாகங்கள் அனைவருக்கும் பொதுவான வளாகங்களாக எப்போது மாறும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதி ஒழிப்பா, சாதி ஒளிப்பா?

Loading

நவீன உயர் சாதி இந்தியர்கள் தமது வாழ்க்கை, அதிகாரம், மூலதனம், சமூக அந்தஸ்து என அனைத்தும் சாதியிலிருந்து வந்திருந்தாலும், அவை அனைத்தையும் அனுபவித்துக்கொண்டே, அவை எதையும் மறுக்காமலேயே, சாதி எங்களின் அடையாளமல்ல என்று கூறி சாதியை பொதுவிவாதத் தளத்திலிருந்து மறைக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

Loading

வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை நிறுவுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பாகுபாட்டைப் பயன்படுத்தி தனது வாக்குவங்கியை நிறுவ முயலும் பாஜகவின் தந்திரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

சனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்

Loading

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!”

Loading

“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”

மேலும் படிக்க