கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அழிவின் விளிம்பில் அடையாளச் சின்னங்கள்

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்கது. எனினும், தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்குரிய இடம் இல்லை. தங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். இச்சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளச் சின்னங்கள் பலவும் அழிந்துவிட்டன. அறியாமையாலும் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

இஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு

இஸ்லாம் கலைகளை வெறுக்கிறது என்ற எண்ணத்தில் கலைகள் விசயத்தில் கடினபோக்குடையோர் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்ற அழகை உய்த்துணர்வதற்கான வாயில்களை மூடிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் அழகு என்னும் இந்த அருளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட. அதாவது பைத்தியக்காரன் ‘அறிவு’ என்னும் அருளுக்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவான்? ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும்? இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும்? எனவே, கலைகள் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்தத் தர்க்கவியல் நுழைவு இன்றியமையாதது. உண்மையில் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறையும் ஒழுங்கும் கூட இதுதான்.

மேலும் படிக்க