குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சமூகத் தொண்டர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: அமித்ஷா பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லா

Loading

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடியவரும் பீமா கோரேகான் வழக்கில் சிறைவைக்கப்பட்டவருமான அருட்தந்தை ஸ்டேன் சுவாமி (84) இன்று மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக அவரின் உடல்நிலையையும் கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதையொரு நிறுவனக் கொலை என்கின்றனர் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். இது தொடர்பாக மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி. ஆதிவாசி மக்களின் நிலத்தைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக்…

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

உ.பி.யில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் பெயரால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்

Loading

ஒருவாரகாலமாக வடநாட்டு செய்தி ஊடகங்களில் படுதீவிரமாக ஒளிபரப்பப்படும் செய்தி என்னவென்றால், சுமார் ஆயிரம் பேரை ஏமாற்றி மதமாற்றம் செய்தற்காக முஹம்மது உமர் கவுதம் (57), முஃப்தி ஜஹாங்கிர் (52) ஆகியோரை உத்தரப் பிரதேச மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் (ஏடிஎஸ்) டெல்லி ஜாமியா நகரில் கைது செய்திருக்கிறது என்பதும், விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்பதும்தான். பிடிபட்டவர்கள் பின்தங்கிய சமூகத்தவர்களையும் பெண்களையும் மாற்றுத் திறனாளிகளையும் குறிவைத்து அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவும், அவர்களுக்குப் பணம் கொடுத்து அல்லது வேலை வாங்கித்தந்து அல்லது திருமணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் மதமாற்றம் செய்ததாகவும் யோகி ஆதித்யநாத் அரசின் காவல்துறை வாதிடுகிறது. அது மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமிய தஅவா மையம் (ஐடிசி) என்பதை நிறுவி மதமாற்றத்தில் ஈடுபட்டதோடு, இந்தியாவின் மக்கள் தொகையையே மாற்றியமைக்கச் சதி செய்ததாகவும், பாகிஸ்தானின்…

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

முஸ்லிம் வெறுப்புக் குற்றத்தை பூசி மெழுகும் உ.பி. போலிஸ்

Loading

காஸியாபாத்தைச் சேர்ந்த 72 வயதான முஸ்லிம் முதியவர் அப்துல் சமது சைஃபி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. “ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவதற்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது தாடியையும் நறுக்கி அவமானப்படுத்தியது ஒரு கும்பல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

எழுபதாண்டுகளாக இந்திய முஸ்லிம்களை வஞ்சிக்கும் ‘இந்துக் குடியரசு’

Loading

கடந்த ஏழு தசாப்தங்களாக பல வழிகளில் இந்த அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக 20 கோடி முஸ்லிம்களை, இரண்டாந்தரக் குடிமக்ககளாக குறுக்குவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம்களின் வறுமை, கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்த பரிதாபகரமான புள்ளிவிவரங்கள் யாவும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது சிறுபான்மை விவகாரம் தொலைநோக்குடன் அணுகப்படவில்லை என்பதை மிகத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும்

Loading

அடிப்படை உரிமைகளற்று, அன்றாடம் பெரும் நெருக்கடிகளுக்கிடையில் வாழ்க்கையை நகர்த்தியபடி, இத்தேசத்தின் குடிகள் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழ அகதிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கும் சீரியல்தான் ஃபேமிலி மேன் 2. மட்டுமின்றி, முதல் சீசன் முழுவதும் பரவிக்கிடந்த இஸ்லாமிய வெறுப்பு இரண்டாவதிலும் சிதறிக்கிடக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

Loading

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

நடிகர் விவேக் மரணமும் கொரோனா தடுப்பூசி அச்சமும் – சில குறிப்புகள்

Loading

சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இரு தினங்களுக்குமுன் நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததற்குக் காரணம் அவர் அதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசிதான் என்ற அச்சம் இன்று பொது மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக இயற்கை மருத்துவம் போன்ற முறைகளை உயர்த்திப்பிடிப்போர் தடுப்பூசி அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி, நிலவும் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

இதற்கு எதிர்முனையில் தடுப்பூசி பாதுகாப்பானது; கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அது அவசியமானது என்று அரசும் மருத்துவர்களும் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலரும் அமைச்சரும் ஒரே குரலில் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பாவத்தின் வசீகரம்

Loading

பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தன்னிறைவு

Loading

நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யார் மாதிரியும் ஆக வேண்டாம். இங்கு ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்புதான். ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. உங்களின் திறமைகளை, செல்வங்களை, நேரங்களை முடிந்த மட்டும் நல்வழியில் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். இறைவன் உங்களுக்கு எந்தப் பாதையை இலகுபடுத்தித் தருகிறானோ அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. எந்தப் பணியில் நீங்கள் மனதிருப்தி அடைகிறீர்களோ அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

Loading

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

மேலும் படிக்க