தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)

Loading

முதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)

Loading

இருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது? இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது? தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

பாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

திருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார்? பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார்? இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே?! நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

இதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது!?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறையச்சமுடையோரின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ் அறிவித்த மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வது மனிதன் அடையக்கூடிய உயர்ந்த நிலையாகும். தம் புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டுமே நம்பும் விலங்குகளின் நிலையைக் கடந்து புலனுணர்வுகளால் உணர்ந்துகொள்ளக்கூடிய இந்த குறிப்பிட்ட அளவைவிட பிரபஞ்சம் மிகப் பெரியது என்பதை உணரும் மனிதனாகிறான். இது பிரபஞ்சத்தின் உண்மைநிலை குறித்து, தனது உண்மைநிலை குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படக்கூடிய ஆற்றல்களின் உண்மைநிலையைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலின் உண்மைநிலை குறித்து மனிதன் கொண்டுள்ள கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாகும். அதேபோன்று இது பூமியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றமுமாகும். புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றை மட்டும் நம்புவோரும் அகப்பார்வையோடும் ஆழ்ந்த ஞானத்தோடும் இந்தப் பிரபஞ்சத்தை அணுகுவோரும் சமமாக மாட்டார்கள். இருவரின் வாழ்க்கையும் ஒன்றாக முடியாது. அகப்பார்வையுடையோர் தங்களின் குறுகிய வாழ்நாளிலே புலனுணர்வுகளால் உணரக்கூடியவற்றைவிடவும் இந்தப் பிரபஞ்சம் மிகப் பெரியது, விசாலமானது என்பதையும் இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் உண்மை இதனைவிட பெரியது என்பதையும் அதனிடமிருந்தே இது வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து கொள்வார்கள். இறைவனைக் குறித்த உண்மைநிலையை பார்வைகளால் அடைந்துவிட முடியாது. அறிவால் அறிந்துகொள்ள முடியாது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 2)

Loading

நிச்சயமாக உறுதியான அடிப்படைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட கண்ணோட்டம் மிக அவசியமானது. அது எல்லாவற்றையும் அறிந்த, தான் நாடியதைச் செய்யக்கூடிய ஒருவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். அவன் வாழ்க்கையின் எல்லா தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்கக் கூடாது. இச்சைகளோ தாக்கங்களோ அவன் வகுத்த மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அது முழுக்க முழுக்க அவசியமானதாக, பாதுகாப்பானதாக, இயல்பான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதாக, நிலையான மையத்தைச் சுற்றி இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அது நேரான, பாதுகாப்பான, நிலையான நோக்கத்தை அடையும் இயக்கமாக இருக்க வேண்டும். அதுதான் சீரான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

Loading

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 2)

Loading

‘சுடர் விடு, மேலும் சுடர் விடு’. உன்னைப் பற்றி யாவற்றையும் மறந்து விடு. கடந்த காலத்தில் உனது வாழ்க்கை ‘அலட்சியம்’, ‘அறியாமை’ நிரம்பியதாய் இருந்தது. உயர்வாழ்வின் சகல அம்சங்களிலும் நீ நிர்க்கதியாக இருந்தாய். உனது அலுவலகப் பணியிலும் கூட பழக்கம் காரணமாகவோ அல்லது நிர்பந்தம் காரணமாகவோ வேலை செய்யும் ஒரு அடிமையாகி விட்டிருந்தாய். இப்போது இந்தப் போக்கை உதறியெறி. அல்லாஹ்வை பற்றி, மக்களை பற்றி, உன்னை பற்றி உண்மையான உணர்வு கொள். புதியவொரு பணியை, புதியவொரு திசையை, புதியவொரு ‘அகத்தை’ தேர்ந்தெடு.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெரியார் ஈ.வெ.ராவும் இஸ்லாமும்

Loading

“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான்! இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)

மேலும் படிக்க