கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நடப்பு தேர்தல் முறையின் பிரச்னைகளும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும்

Loading

1952இலிருந்து (அதற்கு முன்பும்கூட) பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றுக்கொண்ட FPTP (First-past-the-post) எனும் இந்தத் தேர்தல் முறையைக் கொண்டே நாம் தேர்தல்களை நடத்திவருகிறோம். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறும் கட்சிகள்கூட அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு இது வழியேற்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸை 35% வாக்குகளைக் கொண்டு 60% தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்பளித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 37% வாக்குகளுடன் 56% இடங்களைக் கைப்பற்ற பாஜகவுக்கும் உதவியது.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் – நூல் பார்வை

Loading

உண்மை ஸூஃபிகள் எங்கோ ஒரு மூலையில் ஓசையற்ற நதிபோல ஒழுகிக்கொண்டிருக்க, எதிர்மறைகளால் ஸூஃபியியம் பற்றிய புரிதல்களமோ அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவலப் பார்வைகளிலிருந்தும் தெற்றுப் போக்குகளிலிருந்தும் ஸூஃபியியத்தை விடுவிக்கிறது இச்சிறு நூல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

இன்னும் எயிதுக!

Loading

தனித்தமிழ் அல்லது தூய தமிழ் என்பது சொற்பொழிவுக்கு அழகு. வட்டார வழக்கிலும் மேடையுரை ஆற்றுவதில் தப்பில்லை. ஆனால், மேடைகளில் செந்தமிழுக்கு உள்ள மதிப்பு ஒருநாளும் வட்டார வழக்குக்கு வாய்க்காது, இயல்பாகவே இது மக்களின் பொது மனத்தில் உணரப்படுகிறது. அதேபோல், தமிழறிஞர் எவரும் தம் அன்றாடப் புழக்கத்தில் செந்தமிழ் செப்புவதில்லை. செப்பினால் வீட்டிலேயே எடுபடாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பிறை பார்த்தல்: நபிமொழியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

நபிமொழியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முடியுமான — இதனை விடப் பலமான — மற்றொரு சாதனம் காணப்படுமாயின், அச்சாதனம் எவ்விதத் தவறோ அனுமானமோ பொய்யோ இன்றி உரிய மாதம் தொடங்கிவிட்டதைக் காட்டக் கூடியதாகவும், கஷ்டமின்றிப் பெறக்கூடியதாகவும், முஸ்லிம் சமூகத்தின் சக்திக்குட்பட்டதாவும் காணப்படுமாயின், பழைய வழிமுறையைப் பிடிவாதமாக பற்றிப் பிடித்துக்கொண்டு நபிமொழியின் நோக்கத்தை ஏன் நாம் அசட்டை செய்ய வேண்டும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு

Loading

அறபு மலையாள இலக்கியத்தின் அடித்தளம் அறபுத் தமிழ் இலக்கியத்திலிருந்து எழுந்துள்ளதால் அதன் ஆய்வுகளை அறபுத் தமிழ் வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும் என்பது அறபு மலையாள ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான வழிவகைகளை அறபுத் தமிழ் ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஆளுமை உருவாக்கமும் குடும்பப் பின்னணியும்

Loading

மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக உசூலுத்தீன் துறைப் பேராசிரியர் தமீம் உசாமா எழுதிய Sayyid Qutb: Between Reform and Revolution என்ற நூலின் தமிழாக்கம் சீர்மை வெளியீடாக இவ்வாண்டின் இறுதியில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். தமிழாக்கம்: நூரிய்யா ஃபாத்திமா. நூலிலிருந்து ஒரு பகுதி கீழே…

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு – நூலறிமுகம்

Loading

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் பற்றிய நினைவுகள் சில இஸ்லாமியர்களைத் தவிர்த்து அனேகமாக பொதுச் சமூக நினைவிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதிய வக்கிரங்கள் நிகழும் யுகத்தில், இந்தியாவில் இந்துத்துவம் இஸ்லாமிய மக்களை இரண்டாம் குடிகளாக மாற்றத் துடிக்கும் காலகட்டத்தில் மீண்டும் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றத்தைக் குறித்துப் பேசுவதும் விவாதிப்பதும் அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிறையிலிருந்து… ஷர்ஜீல் இமாம்

Loading

மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இன்றுடன் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

எஸ்.எல்.எம். ஹனீபா – ஒரு முன்னோடியின் வழித்தடம்

Loading

எஸ்.எல்.எம் தன்னுடைய வாழ்க்கையை தேர்வுசெய்ததும், அதை ஒழுங்கமைத்துத் தொடர்ந்ததும் சவால்கள் நிறைந்த ஒன்று. இந்தச் சவால்களின் வழியான பயணத்தின் அனுபவங்களே அவரை பலப்படுத்தின. அவரை வீரராக்கின. இடையில் வந்த அத்தனை நெருக்கடிப் புயல்களிலும் அவர் வீழ்ந்துவிடாது நிமிர்ந்து நிற்கும் பெரியதொரு ஆல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன விடுதலை கீதம் வாசிக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை!

Loading

உலகக் கோப்பையில் பொங்கிப் பெருகியிருக்கும் ஃபலஸ்தீன விடுதலை ஆரவாரம் அம்மக்களுக்கு அவர்கள் தனித்து விடப்படவில்லை என்ற செய்தியையும், உலகுக்கு ஃபலஸ்தீன விடுதலை வேட்கை உயிர்ப்புடன் இருக்கிறது என்ற செய்தியையும் பறைசாற்றியிருக்கின்றது. அதே நேரத்தில், இஸ்ரேல் என்னதான் அறபுலக அரசுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு தனது இருப்பை அங்கீகரிக்கச் செய்தாலும், மக்களைப் பொறுத்தமட்டில் அது என்றுமே ஒரு நாடாக அங்கீகாரம் பெற முடியாது என்ற செய்தி பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தப்பட்டிருக்கின்றது.

மேலும் படிக்க