கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்

Loading

காலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அரசுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதனுடைய பலத்தின் துணையுடனோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கொரோனாவை விட வேகமாகப் பரவும் இஸ்லாம்-வெறுப்பு வைரஸ்!

Loading

“நூற்றுக்கணக்கான முஸ்லிம் வீடுகளும் கடைகளும் அழிக்கப்பட்ட டெல்லி படுகொலைகள் நிகழ்ந்து சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அதிகரித்திருக்கும் போலித் தகவல்களும் ஊறு விளைவிக்கும் வகுப்புவாத மொழியும் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது” என்று ஈக்வாலிட்டி லேப்ஸின் நிர்வாக இயக்குனர் தேன்மொழி சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், “மற்றொரு படுகொலைக்கான அச்சுறுத்தல் இன்னும் எஞ்சியிருக்கிறது” என அவர் எச்சரிக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய முஸ்லிம்கள் சிறுபான்மையினரா?

Loading

சிறுபான்மை என்று வரையறுக்கப்படுவதில் எண்ணிக்கை மட்டுமே மையமான அம்சம் அல்ல. ஒரு அரசியல் அமைப்பில் பெரும்பான்மைச் சமூகத்தை ஒப்பிடுகையில் சிறுபான்மைச் சமூகம் எவ்வாறு அதிகாரம் குன்றிய நிலையில் இருக்கிறது என்பதே அதில் மையமானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்

Loading

2020ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் டெல்லியில் இந்து தேசியவாதக் கும்பல்கள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் வணிகத்தலங்களையும் மசூதிகளையும் எரித்துக் கொள்ளையடித்தனர். தப்பித்து ஓட முடியாத முஸ்லிம்களைக் கொன்றனர். அல்லது உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்களை காவல்துறையும் பாதுகாக்கவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்

Loading

முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதும், முஸ்லிம் பெண்களை அந்தச் சமூகத்து ’அடிப்படைவாத’ ஆண்களில் இருந்து விடுவிப்பதும் தங்களுடைய கடமைதான் என தம்மைத் தாமே ஒரு மீட்பராகவும் சக்திமானாகவும் கருதும் சிபிஎம் மனநிலையில் இருந்தே ஜிப்ஸி உருவாகியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வாழ்க்கையும் வலிகளும்

Loading

தர்க்கங்களால் சூழப்படாத எளிய நம்பிக்கையே சிறந்தது. அது ஒரு சிறு குழந்தை தன் தாயின் மீது வைக்கும் நம்பிக்கையைப்போல. உண்மையில் அதுதான் சரியான நம்பிக்கையும்கூட. அனைத்து அதிகாரங்களும் அவன் கைவசம்தானே உள்ளது. நம்மிடம் இருப்பவைகூட நம் அனுமதிகொண்டு இயங்குபவை அல்லவே. நாம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்போது காப்பாற்றுபவன் அவனே. நாம் நோயுற்றால் குணமளிப்பவனும் அவனே. அவனைத் தவிர வேறு எங்கும் நமக்கு அடைக்கலம் இல்லை என்பதை நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

கருத்து மோதல்கள்

Loading

எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. முட்டி மோதி நாம் சரியானவற்றை அடையலாம். தகுதியானவை நிலைபெறுகின்றன. மற்றவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. கருத்துகள் மாறக்கூடியவை. அவை கால, இட சூழல்களுக்கேற்ப மனநிலை அடையும் மாற்றங்களுக்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கின்றன. கருத்துகளோடு நம் ஈகோவை கலந்துவிட்டால், அவற்றை அரசியல் நிலைப்பாடுகளாக மாற்றிவிட்டால் அவற்றிலிருந்து விடுபடுவது கடினம். அப்போது அவை நம்மை சிறைப்படுத்தும் சிறைச்சாலைகளாக மாறிவிடுகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நினைவலைகளும் புதுப்புது அனுபவங்களும்

Loading

எல்லாம் ஒரு கனவுபோல நிகழ்ந்துவிடுகின்றது. கனவுக்கும் நிஜத்திற்கும் மத்தியிலுள்ள மெல்லிய திரை சில சமயம் அகற்றப்பட்டுவிடுகிறது. நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தர்க்கத்திற்கு அப்பால்

Loading

கனவுகள் எப்படி தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையோ அப்படித்தான் நம் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளத்தான் செய்வார்கள். பெரும்பாலோர் அவற்றை கவனிப்பதில்லை அல்லது அவற்றைக் குறித்து சிந்திப்பதில்லை. மிகச் சிலரே அவற்றிற்குப் பின்னாலிருக்கும் மறைகரம் குறித்து சிந்திக்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பொறாமையும் அகங்காரமும்

Loading

மனதின் பேராசையையும் அகங்காரத்தையும் வெல்வதுதான் ஆன்மீகத்தின் நோக்கம். நம்மைச் செயல்படத் தூண்டும் காரணிகளாக இருக்கும் அகங்காரத்தையும் பேராசையையும் அகற்றி அந்த இடத்தில் இறைதிருப்தியை அமர வைப்பதுதான் இஸ்லாம் கூறும் ஆன்மீகத்தின் நோக்கம். இந்த நிலைதான் மனிதன் ஆன்மீகத்தின் உச்ச நிலை. இறைதிருப்தியே அவனை செயல்படத் தூண்டுகிறது. அகங்காரமோ பேராசையோ அல்ல. நாம் அகங்காரத்திற்கு முன்னால்தான் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறோம். பணிவுக்கு முன்னால் அகங்காரத்தை வெளிப்படுத்த மாட்டோம். புகழை விரும்பாதவர்களை நாம் புகழ்வதும் புகழ்வெறி கொண்டவர்களை நாம் சிறுமைப்படுத்த எண்ணுவதும் இதனால்தான். நம்முடைய செயல்பாடுகளுக்குப் பின்னால் இறைதிருப்தி இருந்தால் மட்டுமே நாம் ஒத்திசைந்து செல்ல முடியும். ஒரு அகங்காரம் இன்னொரு அகங்காரத்தை சகித்துக்கொள்ளாது.

மேலும் படிக்க